நிழல் மனிதர்கள்
எனது தலை மயிர் முதல்
பாதவெடிப்பு வரை அனைத்தையும்
இருளில் புதைத்துவிட்டு நான்
எந்த இரவிற்கு நிழல் வழங்குவது……..
உனது இமை விலகி
கருவிழியை தொடும் நேரத்தில்
நான் கண்ணீரின் நிழலில்
நிறுத்தம் கொடு சற்று
தாகம் தனித்துக் கொள்கிறேன்……
உள்ளங்கையை மடக்கி
நீ கொடுக்கும் அரையணா
கொடைக்காக உச்சி வெளுத்தும்
ஓயாமல் நிற்கிறோம்
அந்த கடவுளை கடந்து வந்த
மறு கடவுளாய் உன் தலை சாய்த்து
நீ போடும் சில்லரையில்
என் முகம் மறைக்கும்
சிறு நிழல் பருகி செல்லலாமே என்று……….
ஒற்றைப்படை கலசம் கொண்ட
ஓங்கிய கோபுரத்தின் ஆகச்சிறந்த நிழல் இன்று
வரை நிலத்தை தொடவில்லை என்பதே
மெய்யாகிபோனது இந்த நிழல் உலகில்………
ஒருவரிடம் வாங்கி ஒருவரிடம் கொடுக்கும்
இல்லாதவனின் நிழலும் இருப்பவனின் நிழலும்
உழைப்பென்ற அரண் தாண்டி
பணம் என்ற நுழைவாயிலில் மறைந்து
புதிதாக உருவாகிறது ஒவ்வொரு நுழைவிலும்
சொட்டு சொட்டாக……..
அப்பனின் குருதியில் சிறு சல்லடைகள் வைத்து
வடிகட்டிப் பிறந்துவிட்டேன்
என் பெயரின் முன் எழுத்தாய் என் வாழ்நாள்
நிழலாகிவிட்டார் அவர்………
நான் யாரை இருட்காட்டில் அடைத்து வைத்தாலும்
அவர் மொத்தமாக பணத்தில் கரும் மோகக்காடாக மாறி
எனது நிழலை ஆக்கரமித்து விடுகின்றார்….
பாவம் எனது மனப்பறவைகள்…
இந்த கரும்பெருவெளியை அடைத்து மொத்தமாக வளர்கின்றன நிழல் மனிதர்களின் கருமைகள்…….
உரக்க பேச்சிகளுக்கு பழக்கப்பட்டு போனதாகவும்……
வழக்கத்திற்கு மிஞ்சியே கனமாகிப்போகிறது……….
சரியான வழியில் செல்கிறது மொழிகள்…
மெல்ல மெல்ல தலையாட்டி நகர்கிறது
மூச்சின் பரவளையங்களை
ReplyForward
|
Leave a Reply
View Comments