Subscribe

Thamizhbooks ad

கவிதைகள் : சசிகலா திருமால்

யாரிடமும் பேசிடா மௌனம்..

நீயில்லா நொடிகளனைத்தும்
மொட்டவிழ்த்த மலரின் அழகோ
மழலையின் மெல்லிய புன்னகையோ
இரசனையின் எட்டா பிடிக்குள்
சிக்கியே மரணிக்கின்றது…
யாரிடமும் பேசிடா நின் மௌனம் கூட
என்னோடு முட்டி மோதுகிறது..
உந்தன் நினைவொன்றையே
ஆடையெனச் சுற்றிக் கொள்ளும்
மனம் ஏனோ வெட்கம் மறக்கிறது…

காற்றோடு கரையும் வாசமதில்
நின் வாசமும் கலந்தே வருகிறது…
நின் வாசமதை சுவாசமென ஏற்று
சப்தநாடிகளும் சப்திக்குமாறு
உயிரின் ஆழம்வரை
இழுத்துக் கொள்கிறேன்..
தன்னிலை மறந்திட்ட என்நிலைக் கண்டு
பரிகசித்து சிரிக்கிறது இந்த காதல்..
காதலில் வீழ்ந்தப்பின்
யாவரின் நிலையும் இதுதானே..
பின் ஏன் என்னை மட்டும்
எள்ளி நகையாடுகிறது
இந்த பொல்லாத காதல்…

********

நீ மட்டும் என்னோடு இரு…

காதல் தேனில் ஊறிய
என் மனதினை
உனக்காய் பரிசளிக்கிறேன்..
தவிர்த்துத் தவிக்க விடாதே
எடுத்து சுவைத்துக் கொள்…
அப்போது தான்…..
உன் அருகாமையை
எதிர்பார்த்து தவித்துருகும்
என் உயிரின் ஆழம் உணர்வாய் நீ…
உன் பெயர் உச்சரித்தே
உறைந்துக் கிடக்கும்
என் இதழ்களின் நிலை அறிவாய் நீ…

காதல் தேசமதில்
ஓர் இடம் பிடித்திட போராடும்
என் மனதின் வேதனை அறிவாய் நீ…
யாவருக்குமான உலகில்
நான் மட்டும் யாருமற்று
தனித்து விடப்பட்டதை நீ அறிவாயா?…
உந்தன் நினைவின் வெப்பம் தாளாமல்
காதல் கழுவில் ஏற்றப்பட்டு பரிதவிக்கும்
பாவியிவளின் மனம்
உன்மீது பித்தம் கொண்டு
பிதற்றுவதைத்தான் நீ அறிவாயா?..

உன்னோடான வாழ்விற்காய்
ஏங்கித் தவிக்கும் என்நிலையை
எப்போதுதான் உணர்வாயோ நீ…
எனக்கு வேறெதுவும் வேண்டாம்
எப்போதும்
நீ மட்டும் என்னோடிரு போதும்…

********

கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.

 

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here