அமீபாவின் கவிதைகள்

அமீபாவின் கவிதைகள்




நீ சொல்வது
எனக்குப் புரியாமல் போனால்
ஒரு பிரச்சனையும் இல்லை.

நீ சொல்வது
எனக்கு புரிந்தால் கூட
எந்தப் பிரச்சினையும் இல்லை.

நீ சொல்வதைக் கடந்து
சொல்லாத சொல்லும்
எனக்குப் புரிந்து விடுவதே பிரச்சனையாகி விடுகிறது.

*******************************************

காலை நேர தாமதம்
பதட்டமான இருசக்கர  பயணம்
சாலையின் குறுக்கில் இருந்து
ஒரு குட்டி பிராணி போல்
உருண்டு உருண்டு வந்து
சக்கரத்தின் அடியில்
சிக்கி நசுங்கியது
நெகிழிப்பை ஒன்று
 சட்டென தோன்றியது

அதற்கு வலித்திருக்குமோ…

– அமீபா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *