1) நேர்மையற்ற சொற்களைக்
கண்டறிகையில்
மனதின் அழுத்தங்கள் மேலேழுகின்றன.
மறைக்கப்பட்டச் செயலில்
உள்அர்த்தம்
சொற்களால் நிறப்பபடவில்லை தான்
ஆயினும்
அச்செயல் உன்னைக் கரைத்தாவிடும்?
புரிந்துணர்தலை
புரிந்துணர்தலால் அறிவுறுத்தப்படுகையில்
அவர்களின் கரங்கள் தடுமாறும்
“மன்னிப்பு” என்ற ஒற்றைப் புள்ளியில் மையமிடும் !
உக்கிரமாகும் ஒவ்வொரு கணமும்
கடந்தே ஆகவேண்டும் !
உன்னிடம் இருக்கும் ஒரு குணமும்
அவரிடம் இருக்கும் ஒரு குணமும்
நேர்க்கோட்டில் பயணிக்கவேண்டுமாயின்
நகர்தல் அவசியம்
கடந்து செல்லல் அவசியம்
இது நடக்குமாயின் நீ இன்னொரு பரிமாணத்தை அடைவாய் !
நீ அடையவேண்டிய தொலைவு அதிகம்
உடையாதிரு
மடையாய் இரு
மாற்றத்தை எதிர்கொள்
மாற்றமே மானுடப் பரப்பை நீட்டிக்கிறது
நீடிக்கும் வாழ்வை நிறைக்கிறது
***********************
2) உயர்த்தப்படுவதும்
உயர்த்துவதற்காகவே
உருவாக்கப்பட்டதும்
எதுவென கொள்ளும் போது.
உயர்த்துவதின் அர்த்தங்கள்
வெகு மனிதர்களின் நரம்புகளை
பிரித்தெடுத்துக் கொண்டே செல்கின்றன.
பிரிப்பதும் பிரித்தாளுவதும்
ஒற்றை..ஒற்றைப் பிறப்பென கொண்டாடுவதும்
எத்தனை நாழிகை
அனைத்தையும் கழுவில் ஏற்றும்
காலம் விரைகின்றன
உன்னையும் என்னையும்
குரல் எழுப்பச் சொல்லி நிற்கிறது
அப்போது-
வணங்கப்படும் எவையும்
உதவாது
உயிர்க்காது!
அப்போதேனும்
அப்போதேனும்
பிறப்பின் அர்த்தம் உணர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென!
– கவிவாணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.