வேலைமுடிந்து
வீடு திரும்புமென்னிடம்
கேட்பதற்கென எத்தனையோ
கேள்விகள் வைத்திருக்கிறான் மகன்,
என்ன வேலை பார்க்குறிங்க
எங்க வேலை பார்க்குறிங்க,
உங்க அலுவலகத்தில்
எத்தனை பேர் வேலை பாக்குறாங்க,
எவ்வளவு சம்பளம் வாங்குறிங்க
வேலை சுலபமாகயிருக்குமா
கடினமாயிருக்குமா,
என நீண்டு கொண்டேயிருக்கின்றன
மகனின் கேள்விகள்,
அவன் ஊருக்குப்போன
நாளொன்றில்
கேள்வி கேட்க யாருமில்லாத போது
பதிலே சொல்ல முடியாத
கேள்வியாய்ப் பயமுறுத்துகிறது… என் தனிமை!
*******************
அவனின் புகைப்படங்களைத் தற்போது
பார்க்க முடிவதில்லை…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

