எட்டுவழிச் சாலை
விரைந்து செல்கிறது
வயலில் புகுந்து
வீட்டின் மேல்
********************
என் வீட்டு
அலார பொத்தானை
அழுத்தும் முன்
பல்லியின் சத்தம்
*********************
என் வருகை
உறுதியானதால்
கதவுகள் அடைக்கப்பட்டன
இப்படிக்கு மழைச்சாரல்
**********************
பேருந்தில் வாசகம்
திருடர்கள்
ஜாக்கிரதை
**********************
இவ்வுலகில்
எப்படியேனும் வாழ்ந்துவிடலாம்
என நினைத்தேன்
பூமி வரவேற்றது மரணத்தின்
வழியில்
**********************
நீ இருப்பதை விட
இறப்பது மேல் என்று
கோபத்தில் கசிந்து விழும் அம்மா
கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை
இறந்து போவேன் என்று
– வெ.நரேஷ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

