Subscribe

Thamizhbooks ad

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




‘ விண் பறவை’
********************
திரு திருவென
முழிக்கின்றன விண்மீன்கள்!
நீந்தவும் தெரியாமல்
பறக்கவும் தெரியாமல்
ஒரே இடத்தில்
ஒய்யார ஒளியில்
ஜொலித்துக் கொண்டு!

எத்தனை பேர்…
வெளிறிக்கிடக்கும்
விரிந்த வானத்தை
விழிகளுக்கு விருந்து
படைத்திருக்கிறோம்?

ஆகாயத்தை
எப்போது நோக்கின
மனிதக் கண்கள்?

வானம் பார்ப்பதாக….
மழையையும், விடியலையும்
தேடியே…..
பார்த்ததுதான்
மனிதனின்
சுயநல நோக்கு!

மனிதரின்
கண்களெல்லாம்
மினுக் மினுக்கெனத்
தெரியுமோ?
வானத்துக் கண்களுக்கு!

இந்த பூமியின் புரட்டுகளை
இலட்சோப லட்சம்
கண்களென…..
நட்சத்திரங்களைக் கொண்டு
கண்காணிக்கின்றதோ வானம்!

நீந்துவதுதான்
மீனின் பாஷை;
நீந்தத் தெரியாத
நட்சத்திரங்களை….
மீனென … விண்மீனென
அழைப்பதிலிருந்தே
இந்த மனிதன்
எவ்வளவு விவரம் புரியாதவனென
நினைக்கத் தோன்றுகிறது!

பறவைகள்
சுயநலமற்றவையென்பது
அவற்றின் வாழ்க்கை
உணர்த்தும் பாடம்;
மனிதருக்கும், மற்றவைக்கும்!

இப்படி…. அப்படிப்
பறக்க வேண்டுமென
நட்சத்திரங்களுக்குப்
பரம்பரை பரம்பரையாக
கற்றுக்கொடுக்கத்தான்
மேலே பறக்கின்றன பறவைகள்!

ஒரு நட்சத்திரமும்
பறத்தலைக் கற்றுக்கொண்டதாகத்
தெரியவில்லை!

பறவைகளும் விடுவதாக இல்லை;
போதித்தல் என்பது
தொடர் நிகழ்வு என்பதை
பறவைகள் சொல்லிக்கொடுத்துக்
கொண்டேதான் இருக்கின்றன!

எப்படி இருக்கும் என
நினைத்துப் பார்க்கின்றேன்;
நட்சத்திரங்கள்
பறந்து வந்தால்
இந்த….
இருண்ட பரந்த வானத்தின்
வனப்பை!

தூண்டில்
**********
உயிர் துறக்க
உசுப்பேற்றி, ஆசைகாட்டி
சுவையூட்டும்…..
தூக்குமரமே தூண்டில்!

எத்தனை எத்தனையோ
உயிர்களை வதைத்து…
மீண்டும் மீண்டும்
அதே அவதாரம்!

மடிந்த உயிர்களின்
கவுச்சியும்,
சிக்கித் தப்பியதுகளின்
சதை நாற்றமும்
ஆழமான தண்ணீரில்
வீசினாலும்,
எப்படிக் கழுவப்படும்?
இறந்துபோன உயிரின் நாற்றம்
அந்தத் தூண்டிலில்!

அறிவற்ற மீன்கள்,
பரம்பரை பரம்பரையாக
தூண்டிலில் தொங்கும்
எச்சில் சில்லுகளுக்கு
ஆசைப்பட்டு……
மடியும் சோகம்!

அடிபட்டு, விடுபட்ட
அறிவற்ற மீன்கள்
தம் அனுபவத்தை
பகிர்ந்து…..
தம் இனம் காக்க
அறிவு பெற்றால்;
தூண்டில்கள் இந்நேரம்
தொலைந்தே போயிருக்கும்!

ஆசை
யாரை விட்டது;
அடிபட்ட மீனும்
ஆசைக்கு ஆட்படுவது
இயற்கையன்று;
அறியாமை!

ஆசையென்பது
அறியாமையின் வெளிப்பாடே!

-பாங்கைத் தமிழன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here