குழந்தை மனசென்பது
வேறொன்றுமில்லை
தான் விரும்பிய
எல்லாவற்றிற்கும்
உயிர் தருவதுதான்.
—-
உதிரும் இலைகள்
காற்றின் மீது கோபப்படுவதே
இல்லை..
அது அழைக்கும் இடங்களுங்கெல்லாம்
கூடவே செல்கின்றன.
—-
மொழியின் எழுத்துக்களை
முதன் முதலில் அறியும்
குழந்தையிடம்
“பார்க்காமல் எழுது” என்றால்
கண்களை மூடிக் கொண்டு எழுதுவது
இலக்கணப் பிழை இல்லைதானே.‌.

– பிச்சுமணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *