எதுவெல்லாம் அழகு
************************
கஞ்சன் வீட்டுப்
பெரிய பூக்கள் அழகு
ஊதாரி வீட்டுச்
சின்னப் பூக்கள் அழகு
ஆட தெரியாதவளின் வீட்டு
ஒயிலான பூக்கள் அழகு
நர்த்தகி வீட்டு
மயில் மாணிக்கம் கொடிப் பூக்கள்
அழகு
கோழையை வீரனாக்கும்
பூக்கள் அழகு
மத்தியானத்தை
தியானம் ஆக்கும்
பூக்கள் அழகு
போர் செய்திகள்
*********************
விளையாடிவிட்டு
வரும் போது
சொற்களை அழுக்காகி
கொண்டு வருகிறாள் பாப்பா
போர் செய்திகள் கேட்டு
பயத்தில்
அதிகம் சாப்பிட்டு
குண்டாகிக் கொண்டே
போகிறாள்
மின்மினி போல்
துலக்கி வைத்ததாய்
இருந்தன அவள் சொற்கள்
கோழிக் கொண்டைப் பூக்களுக்கு
நிக்கா ஆயிருந்தன
இரு சிட்டுக்குருவிகள்
பேசுவதை
மௌனம் எனவும்
நெல் திணையை
அம்மா கையால்
தேய்க்கும் பொழுது
சொற்கள் பேசுவதையும்
அறிந்து வைத்திருந்தாள்
– க. புனிதன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

