உணவுக் கடவுள்…..!!!!
அந்தக்
கடவுளைக்
காலையில் தான்
கண்ணாரக் கண்டேன்
கரடு முரடாகிப்போன
அரைகாணிநிலத்தை
உழுது கொண்டிருந்தான்
அரைஞாண்
கயிற்றுக் கோவணத்தோடு ,
கடவுளின்
கோவணம்
காற்றில்
பறந்து கொண்டிருந்தது
குருவிகளை
விரட்டும்
பச்சை வண்ணக்கொடி
அன்னக்கொடியாக ………!!!!!!!
மழை……!!!!
நீ
புள்ளி வைத்து
கோளம்
இடாத பொழுதெல்லாம்
வானம் தன்
கண்ணீரால்
புள்ளி வைத்து
கோளமிட்டு
கொண்டிருக்கிறது
அதிகாலை வேளையில் … ”
சிவப்பு இரத்தம்….!!!!
நீங்கள்
ரோஜாவை
வரையும் பொழுது
முட்கள் உங்கள் கைகளை
கிழிக்கவில்லையாயென்று கேட்கிறீர்கள்
முட்கள் கைகளை
கிழித்தனால் தான்
அவை
சிவப்பு சாயங்களை பூசிக்கொண்டிருக்கிறதென்று பதில் அளித்தவாறு
அங்கிருந்துநகருகிறேன்
சிவந்த முகத்தோடு….!!!!
கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

