சரகு கவிதைகள்

சரகு கவிதைகள்




தீயாக்கல்
***************
பிணைத்துக் கொண்ட மேகங்கள் ..
வெள்ளிப் பாலாய்க்
கொட்டிய மழை..
அடங்காத அன்பின் ஊற்றால்..
ஆகாசந்தொட்ட நெடுமரங்கள்..
பச்சைக்குப் பட்டா?!..
பட்டுக்குப் பச்சையா?!..
பிதுங்கி நின்றன
வியப்பின் விழிகள்..

ஓசோனின் சேலை வைத்து..
மனிதர்கள் சூதாட ..
துரியோதனன்கள் சபை கூட..
துச்சாதனன்கள் உருவத் தொடங்க..
காட்டின் வயிறு எரிகிறது..

அணைக்க முயல்க…

பணமாக்கல்
***************
ஏழையின் வீட்டில் ..
வயிறு எரியாமல் ..
விறகு எறிந்தால் ..
பணக்காரன் பதறுவது … ஏன்?

– சரகு

மு. சரவணக்குமார்,
ஈரோடை.
9488076070.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Saro

    தங்களின் வரிகள்
    மழையாகட்டும்…
    மனித மனங்கள்
    பசுமை பட்டுடுத்தட்டும்…
    காடுகளும்…………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *