கடலாடி..கடலாடி..களித்ததுப்போது
கடல் அழுக்காகிப்போனது
எஃகு ஆலை சமைப்போம்
கடல் நீரையும் கூவமென முரசுரைப்போம்!
எந்தக் கேள்வியையும்
எந்த எதிர்வினையையும்
எவரும் செய்யக்கூடாது
எல்லாச் சட்டங்களையும்
வைரஸ் வரவை வைத்து
முடித்துக்காட்டுவோம்..
இந்திய நிலங்கள்
இந்தியனுக்கு இல்லை என்பதே
எங்களின் —
குறிக்கோள் அதுவே– எங்கள்
செங்கோல்
அடுத்த தலைமுறைகள்
என்ன செய்வார்கள்
கவலை வேண்டாம்
நான் ஒரு விவசாயி
நான் ஒரு தேனீர் கடைக்காரன்
சாமானியர்களின் சாவை
சரிவிகித்த்தில் பார்த்துக்கொள்கிறோம்
ஆதலால்
வீட்டின் முன் வேல் வைத்து
கந்த சஷ்டி கவசம் பாடுங்கள்
– கவிவாணன்
Everything is very open and very clear explanation of issues. was truly information. Your website is very useful. Thanks for sharing. Constantia Jaime Novelia