Kaviyoviyathodar-Magathanavargal 20 by Na ve Arul நா.வே.அருளின் கவியோவியத் தொடர்-மகத்தானவர்கள் 20




மகத்தானவர்கள்
*************************
கவிதைத் திருத்தச் சட்டங்கள் கொண்டுவந்து
அவசர அவசரமாக அமுல்படுத்துகிறபோது
கவிஞர்கள் என்ன செய்வார்கள்?

கவிதைக்குக் குறைந்தபட்ச மதிப்பு கேட்டு
திடீரென உலகிலுள்ள எல்லாக் கவிஞர்களும்
வேலை நிறுத்தம் செய்தால்
என்னாகும் சொற்களுக்கு?

உருட்டி விளையாட ஒரு குழந்தையில்லாத வருத்தத்தில்
மணலில் புதைந்து கிடக்கும் மரப்பாச்சியைப் போல
எல்லா சொற்களும் அநாதையாய்க் கிடக்குமோ?

அவை அநாதைகளாகி
யாரிடம் போய் பிச்சையெடுக்கும்?

அவை விதைகளாக மாறிவிடும்
ஒரு விவசாயியின் கைகளின் வழியே
கலப்பைக் கீறலில்
ஒவ்வொன்றாய் விழுந்து
வேர்க்கடலைச் செடியாகும்.
பறிப்பவர்களின் கைகளில் மண்வாசம் எழும்.

மண்வாசம் மீண்டும் சொற்களாய் மாறி
விவசாயிகளைக்
கவிஞர்களாக மாற்றவல்லவை.

விவசாயிகள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்
போராட்டத்தில் களைத்துப்போன கவிஞர்களுக்குப்
புசிக்க ரொட்டிகளுடன் வருவார்கள்.
நடுங்கும் குளிரில் விறைத்துப்போனவர்களுக்குப்
போர்வைகளுடன் வருவார்கள்.
குளிரில் இறந்துபோன கவிஞர்களுக்கு
இரங்கல் உழவு உழுவார்கள்
கவிஞர்களின் வெற்றியைக் கொண்டாட
ஒரு குடியரசு தினத்தில்
கண்டிப்பாய் டிராக்டர்களுடன் வருவார்கள்.

கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்

முந்தைய தொடரை வாசிக்க:
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 18 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 19 – நா.வே.அருள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *