மனித உணர்வுகளை மனித இயல்புகளையும் மிகவும் துல்லியமாக தன்னுடைய எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தக்கூடிய ஒரு மாபெரும் எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி அவர்கள். இந்த புத்தகத்தை தமிழில் மொழிப்பெயர்த்தவர் வழிப்போக்கன்.
இந்த புத்தகத்தில் இரண்டு கதைகள் இருந்தன. இரண்டு கதைகளும் மிகவும் புதிதாக இருந்தன. அதில் ஒன்று இறைவனை மூன்று கேள்விகள் மூலமாக சாத்தான் சோதித்ததாக வில்லியத்தில் வருகின்ற பகுதியாகும்.
மற்றொன்று வாழ்வின் அர்த்தத்தினை பற்றி கூறுகிறது. இதில் இரண்டாவது கதையானது என்னை கவர்ந்தது வாழ்வென்பது அர்த்தமற்ற ஒன்று என்கின்ற சிந்தனையின் விளைவாக ஒரு மனிதன், தான் தற்கொலையை செய்து கொள்ள வேண்டும் என்றே சிந்தித்துக் கொண்டிருக்கின்றான். அப்படிப்பட்ட ஒருவன், வாழ்வின் அர்த்தத்தினை அறிந்து கொள்வதே “கேள்விக்குரிய மனிதன் கனவு” என்கின்ற சிறுகதை.
வாழ்வென்றால் என்ன?
மரணத்திற்குப் பின்னர் ஏதேனும் இருக்கிறதா?
பிறப்பு இறப்பு என்கின்ற இரு கால இடைவெளிகளுக்கும் நடுவே இருந்து கொண்டிருக்கின்ற வாழ்வென்று ஒன்றிற்கு அர்த்தமேதும் இருக்கின்றதா?
ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும்?

எதற்காக வாழ வேண்டும்?
என்கின்ற கேள்விகளையும் அதற்கான தன்னுடைய பதில்களை தற்கொலை செய்து கொள்ள சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் வாயிலாக ஆசிரியர் தஸ்தயேவ்ஸ்கி அழகுற பல சுவாரசியமான நிகழ்வுகளுடன் வாசிப்பாளரின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கூறுகின்றார்.
நன்றி……நூல் பெயர்: கேலிக்குரிய மனிதனின் கனவு
ஆசிரியர் பெயர்: தஸ்தயேவ்ஸ்கி
தமிழில்: வழிப்போக்கன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 60
பக்கங்கள்-79
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/kelikuriya-manithanin-kanavu/
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.