கேள்வியும் நானே பதிலும் நானே: வானியல் வினாக்களும் விடைகளும் -1
1. விண்வெளியில் சத்தம்/ஒலி (Sound) கேட்குமா?
இல்லை, விண்வெளியில் சத்தம் கேட்காது. சத்தம் பரவுவதற்கு காற்று, நீர் போன்ற ஊடகங்கள் தேவை. விண்வெளி ஒரு வெற்றிடம் (Vacuum) என்பதால், அங்கு எவ்வளவு பெரிய வெடிப்பு நிகழ்ந்தாலும் அது அமைதியாகவே இருக்கும். வெளியில் எதுவுமே கேட்காது
2. டைட்டனில் மழையாக பெய்வது என்ன?

சனிக்கோளின் நிலவான டைட்டனில் (Titan) பூமியைப் போல தண்ணீர் மழை பொழிவதில்லை. அதற்கு பதிலாக, திரவ மீத்தேன் (Liquid Methane) மற்றும் ஈத்தேன் மழையாகப் பொழிகிறது. அங்குள்ள வெப்பநிலை மிகக் குறைவாக இருப்பதால் (-179°C), இயற்கை எரிவாயு திரவ நிலையில் உள்ளது. இது முதன்மையாக , சுமார் 29 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை , பருவமழை போன்ற கனமழையாகப் பொழிகிறது . இந்தத் தீவிரமான, அரிதான புயல்களின்போது பெரிய நீர்த்துளிகள், மெதுவான வீழ்ச்சி வேகம் மற்றும் பெரிய, பிரகாசமான வானவில் ஆகியவை உடன் காணப்படுகின்றன
3. சூரியனில் இருந்து பூமிக்கு ஒளி வர எவ்வளவு நேரம் ஆகும்?
சூரியனில் இருந்து பூமிக்கு ஒளி வர சுமார் 8 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆகும். தொலைக்காட்சியில் ஒரு சினிமா பாடலைக் கேட்கும் நேரம்தான். . சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒளியின் வேகம் (வினாடிக்கு 3 லட்சம் கி.மீ) என்பதால், சூரிய ஒளி நம்மை வந்தடைய 500 நொடிகள் (8 நிமி 20 வி) ஆகிறது.
4. நெப்டியூனில் ஒரு வருடம் என்பது எவ்வளவு காலம்?

நெப்டியூனில் ஒரு வருடம் என்பது பூமியின் 165 ஆண்டுகளுக்குச் சமம். நெப்டியூன் சூரியனிடமிருந்து வெகு தொலைவில் உள்ளதால், அது சூரியனை ஒருமுறை சுற்றி வர 165 புவி ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
5. பிரபஞ்சத்தில் மிகவும் குளிர்ந்த இடம் எது?
பூமராங் நெபுலா (Boomerang Nebula)தான் இதுவரை அறிந்த பிரபஞ்ச வெளியில் மிகுந்த குளிரான இடம் என்று தெரிகிறது. இது -272°C (-458°F) வெப்பநிலையைக் கொண்டுள்ளது. இது பிரபஞ்சத்தின் வெப்பநிலையை விட (cosmic microwave background) மிகக் குறைந்த வெப்பநிலையைக் கொண்ட இயற்கையான இடம்.
6. கருந்துளையில் (Black Hole) நீங்கள் விழுந்தால் என்ன நடக்கும்?
கருந்துளையின் ஈர்ப்பு விசை மிக மிக மிக அதிகம். ஒருவர் கருந்துளைக்குள் விழுந்தால், ஈர்ப்பு விசை வித்தியாசத்தால் உடல் நூடுல்ஸ் போல நீளும். இந்த நிகழ்வுக்கு “ஸ்பாகெட்டிபிகேஷன்” (Spaghettification) என்று பெயர். இறுதியில் அவை அனைத்தும், அணு அணுவாக சிதைந்துவிடும்.
7. நிலவில் ஆம்ஸ்ட்ராங் பதித்த கால் தடங்கள் எத்தனை வருடங்களுக்கு நிலைத்திருக்கும்?
மில்லியன் கணக்கான ஆண்டுகள்வரை கால் தடங்கள் நிலைத்து இருக்கும், ஏனெனில், நிலவில் காற்று, மழை, மற்றும் அரிப்பு (Erosion) என எதுவும் இல்லை. எனவேதான் , நீல் ஆம்ஸ்ட்ராங் வைத்த கால் தடம், நிலவின் தரையில் அப்படியே இருக்கிறது. ஒருக்கால், விண்கற்கள் நிலவில் மோதி அதை அழிக்கும் வரை அப்படியே இருக்கும்.

8. வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn). கோள்களில் மழை பொழியுமா? ஆது என்ன வகையான மழை ?

வியாழன் (Jupiter) மற்றும் சனி (Saturn). கோள்களின் வளிமண்டலத்தில் அதிகப்படியான கார்பன் உள்ளது. அங்குள்ளவளிமண்டலத்தில் நிலவும் கடும் அழுத்தம் மற்றும் வெப்பம், காற்றில் உள்ள கார்பனை வைரமாக மாற்றி, மழையாகப் பொழிய வைக்கிறது. சனிக்கோளில் பெய்யும் வைரமழையில், வைரங்கள் பெரிய துண்டுகளாக, நீங்கள் மோதிரம்&நெக்லஸ் செய்யும் அளவு பெரியதாக இருக்கும்.

9. பிரபஞ்சத்தின் மிகப் பெரிய விண்மீன் எது?
UY Scuti (UY ஸ்கூட்டி). இது ஒரு சிவப்பு மீப்பருந்தி (Red Supergiant) விண்மீன். . இது சூரியனை விட சுமார் 1,700 மடங்கு பெரிய விட்டம் கொண்டது. சூரியனுக்குப் பதிலாக இதை வைத்தால், வியாழன் கோள் வரை அதன் பரப்பு இருக்கும்.
10. விண்வெளியில் நாம் ஏன் மிதக்கிறோம்?

விண்வெளியில் புவிஈர்ப்பு விசை (Gravity) எதுவும் இல்லாததால் அல்ல; மாறாக, விண்வெளி வீரர்கள் பூமியைச் சுற்றி மிக அதிவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பூமியை நோக்கி “தொடர்ந்து விழுந்து” (Continuous Free fall) கொண்டிருப்பதால், அவர்கள் மிதப்பது போல உணர்கிறார்கள்.
📚 எழுதியவர் :

– ✍🏻 பேரா.சோ.மோகனா
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

