Konalgalai Nesippom Poem by Shanthi Saravanan கோணல்களை நேசிப்போம் கவிதை - சாந்தி சரவணன்

கோணல்களை நேசிப்போம் கவிதை – சாந்தி சரவணன்




மாங்காய் புளிக்கும்
பாகற்காய் கசக்கும்
தேன் இனிக்கும்
மலர்கள் மணக்கும்
அதே போல்
மனிதரில்
சிலர் நிஜம் உரைப்பர்
சிலர் பொய் உரைப்பர்
சிலர் புறம் பேசுவர்
சிலர் நடிப்பர்
சிலர் நகைப்பர்
அவர்களின் கோணல்களை
நீ திருத்த முயலதே!
மாற்றங்கள் முதலில்
உன்னில் துவங்கு!
தனித்துவம்
உன்னில் மட்டுமே இல்லை
சகமனிதத்திலும்
உள்ளது என்பதை
உணர்!
கோணல்களை
ஏற்றுக் கொள்ள
கற்றுக் கொள்!
மறவாதே
உயர வித்தியாசம்
உள்ள விரல்களின்
கூட்டமைப்பு தான்
உன் கை!
மரங்களின் கோணல் கிளைகள்
தான் நமக்கு நிழல் தருகின்றன!
பலவகையான
கோணல் மனங்கள்
சூழத்தான் நாம் வாழ்கிறோம்!
பிம்பமாக
நமது கோணல் அவர்களின் பார்வையில்
அவர்களின் கோணல் நமது பார்வையில்!
ஆதலால்
கோணல் மனங்களை
நேசிப்போம்!
நேசம் வளர்போம்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *