Koppai Theniee Poem By Sakthi கோப்பைத் தேநீர் கவிதை - சக்தி




தித்திக்கும்…சுவையில்
திடமான புத்துணர்ச்சிக்கோர்…
புது வரவாய்…கையில்
சுமக்கும்…ஒரு கோப்பைத் தேநீரில்…
ஆவி பறக்க…

ஆவியின் சூட்டைக் குறைக்க இதழ்குவித்து…
ஊதிய போது…
கோப்பைத் தேநீரில் சில துளிகள்…
சிதறிப் பறக்க…

பறந்த…துளிகள் நீர்த்திவளை போல்
மேசையை அலங்கரிக்க…

தேநீரில் சுவையை நானறியும்
முன்னே…எங்கோ இருந்து பறந்து
வந்த ஈக்களின் கூட்டம் தேநீரின்
சுவையை ருசிபார்த்து…
என் முகம் பார்க்க…

இன்னொரு முறை ஊதி…
அதற்கோர்…பங்கினை மீண்டும் வழங்க… தித்திக்கும் தேநீரில்…
நன்றி சொல்லி பறந்ததே…

தேநீரைப்பருகும் முன்னே…
புத்துணர்வும்… புதுபந்தமும்…
ஒரு கோப்பைத் தேநீரால்…
கண்ட பின்னும்…

ஒவ்வொரு முறையும் ஈக்களின் கூட்டம் எதிர்பார்த்தே…மீண்டும்
ஒரு கோப்பைத் தேநீரை
சுமக்கின்றேன்…

கோப்பைத்தேநீரால் உருவான
புதுவரவைத்தேடியே…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *