Subscribe

Thamizhbooks ad

குப்பை மனம் சிறுகதை – தெ. சக்தி ராணி

விசில் சப்தம்… காதைப் பிளந்தது… நல்ல கனவு… அதை கெடுக்குற மாதிரி… இப்படி ஒரு சத்தம் என்று புலம்பிக் கொண்டே எழுந்தாள் அகல்யா…

“அம்மா… குப்பை போடுங்க…”

“காலங்காத்தால உன் வேலையை ரொம்ப நல்லா பாக்குற…”

“ஆமா அம்மா… நேரமாச்சுல… இப்போ ஆரம்பிச்சா தான்… மத்த தெருவுக்கெல்லாம் போக முடியும்…”

நெற்றி நிறைய விபூதி… சந்தனம்.. குங்குமம்… என பக்தியின் அடையாளமாய் காட்சி அளித்தான்… குமார்.

“சரி… சரி… இந்தா குப்பை”

“ என்ன‌ அம்மா… குப்பையை பிளாஸ்டிக் தனியா… காய்கறி தனியா… இப்படி எல்லா குப்பையும் தனித்தனியா கொடுங்கனு சொன்னேனே…”

“ அட… ஆமா… மறந்துடுச்சி எனக்கு… இருக்குற வேலையில் இதெல்லாமா பார்த்து பார்த்து போட முடியும்…”

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க அம்மா… ஆபிஸர் பார்த்தா என்னைத்தான் திட்டுவார்..”

“சரி… நாளைக்கு பிடிச்சு போடுறேன். இன்னிக்கு நீ பிரிச்சுக்கோ…”

“ம்ம்… சரிமா… மறந்துடாதீங்க…”

அடுத்த வீட்டை நோக்கி வண்டியை நகர்த்துகிறான்.

எல்லா வீட்லையும் ஒரே பதில் தான்… நாளைக்கு… நாளைக்கு என்று…

நாளைக்கு பிரிச்சு வைச்சா தான் குப்பையை வாங்குவேன்… என்று கூறிக்கொண்டே நகர்ந்தான். குப்பை வாங்குவதில் மட்டுமின்றி… வீட்டு வேலை செய்வதிலும் கெட்டிக்காரன் தான் குமார். தன் வேலை முடிந்தவுடன் ஓய்வென்ற பேச்சுக்கே இடம் அளிக்காமல்… அடுத்தடுத்த வேலைகளை செய்து கொண்டே இருப்பான்.

மறுநாளும்… இதே போல் குப்பை வாங்க வந்தான். சிலர் மட்டுமே குப்பைகளை மட்கும் குப்பை… மட்காத குப்பை என பிரித்து வைத்திருந்தனர். சிலர் என்ன சொன்னாலும் பரவாயில்லை… இதற்கெல்லாம் நேரமில்லை என்பது போலவே, மொத்தமாக வைத்திருந்தனர்.

‘இவங்க செய்யும் வேலைக்கு நாம திட்டு வாங்கணுமே’னு அவனால முடிஞ்ச அளவு அவனே பிரிச்சு வைக்க ஆரம்பிச்சான்.

இருந்தாலும்… எல்லார் வீட்டு குப்பையும் சேர்த்தா… இதெல்லாம் எப்படி சரிக்கட்டுவது என்றே சிந்திக்க ஆரம்பிச்சான். நம்ம சொல்லி இவங்க கேட்கணும்னா… முதல்ல எல்லார்கிட்டையும் அதிகாரமாக பேசணும். இல்லைனா… அடிபணிந்து பேசணும்.

முதல்ல அடிபணிந்து பேசுவோம்னு… ஒவ்வொரு வீட்லையும் குப்பை கொட்ட வரும் நபர்களிடம் சாதாரணமாக பேச்சு கொடுத்தான்.

சினிமா… முதல் அரசியல் வரை என் ஒவ்வொன்றையும் அத்துபடியாக பேசத்துவங்கினான். குமாரிடமிருந்து கருத்துக்கள் கேட்பதற்கென்றே பெண்கள் கூட்டம் கூடியது. இன்னிக்கு குமார் என்ன சொல்லப்போறான் என்றே பலரது சிந்தனை இருந்தது. வெறும் செய்திகள் மட்டுமின்றி அப்பப்போ புரணிகளும் பேசப்பட்டது.அதனால் பேசாமல் இருந்த பெண்கள் கூட பேச ஆரம்பித்தனர்.

எல்லாம் சரியாப் போயிட்டு இருக்கும் போதே குமார் தன்னுடைய எண்ணத்தை செயல்படுத்த ஆரம்பிச்சான்.

நல்லா பேசிக்கிட்டு இருந்த குமார்.. தீடீரென்று பேச்சை குறைக்க ஆரம்பிச்சான்…

எல்லாருக்கும் ஆச்சர்யம்… ஏன்‌ இவன் பேச மாட்டிக்குறான்… ஒரு விஷயமும் தெரியலையே… என மண்டையைக்குடைந்தனர். ஏன் குமார் இப்போலாம் கடந்து போறதுல ரொம்ப ஆர்வமா இருக்க என்று கேட்க…

“ஆமா… ஆமா… நிறைய வேலை இருக்கு… நீங்க தர்ற ஒட்டு மொத்த குப்பையும் பிரிச்சு… எடுக்க மத்தியானம் ஆகுது… இப்படி பேசிட்டே போனா… இன்னும் நேரம் தான் போகுது…” என்றே சடைப்பாக பதில் கூறினான்…

“என்ன குமார்… இதுக்கெலாமா… இப்படி பண்ற… இரு… இனி… நாங்களே எல்லாம் பிரிச்சு வைச்சிடுறோம்… உனக்கும் வேலை குறையும்ல…”

“இதெல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு… ஆனா பண்ணனுமே நீங்கள்ளாம்”

“அதெல்லாம் சிறப்பா பண்ணுவோம்… நீ சரியான நேரத்துக்கு மட்டும் வந்துடு… வேலை சீக்கிரம் முடியும்” என்றே சொல்ல…

மனதிற்குள் சிரித்தவனாய்… அப்பாடா… இவங்கள ஒருவழியா நம்ம எண்ணத்துக்கு செயல்பட வைச்சாச்சு என்றே கூறிக் கொண்டாலும்…

‘அந்த பதினைந்தாம் வீட்ல உள்ளவங்க … பொண்ணுக்கு ஏதோ பிரச்சனைனு சொன்னாங்க. உனக்கு ஏதும் தெரியுமா’னு கேட்க…

‘தெரியலையே… விசாரிச்சு சொல்றேன்…’ என்றே நகர்ந்தான்… விசில் சப்தத்துடன்… மனநிம்மதியுடன்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here