இப்போ நிறைய பெற்றோர்கள் சொல்ற குறை என்னுடைய குழந்தை என்னோட பேச்சைக் கேட்கவே மாட்டேங்குது. நான் எது சொன்னாலும் எதுத்து பேசுற அடம் பிடிக்குது. எப்போ பாரு போன் வேணும்னு அடம் பிடிக்குது. படிக்க உட்கார்வது இல்லை. இப்படி நிறைய பேரு சொல்ல கேட்டிருக்கேன் ஒரு சின்ன டிப்ஸ். கட்டாயம் நேர்மறையான விளைவுகள் வரும்.

இரவு தூங்கும் பொழுது உங்கள் குழந்தையோடு நேரம் செலவிடுங்கள் தனியாக அவர்களைத் தூங்க விடாதீர்கள். நீங்கள் அருகில் இருக்க வேண்டும். அவர்களின் காலை பிடித்து விடுங்கள். கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொண்டு கால்களில் தடவி நன்றாக மசாஜ் பண்ணுங்க அப்படி மசாஜ் செய்யும் பொழுது நிறைய பேசுங்கள். நீங்கள் முதன் முதலில் இதைக் கையாளும் பொழுது உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதையோ உங்கள் செயல்பாட்டையும் கவனம் கொள்ளாது.

ஆனால் நாட்பட நாட்பட குழந்தைகள் உங்களோடு இணைந்து கொள்வார்கள். அன்றைய தினத்தில் உங்களின் செயல்பாடுகளை அதாவது ஆபீஸில் எனலாம் நடந்தது உங்கள் வேலை எவ்வளவு இயல்பாக நீங்கள் முடித்தீர்கள். உங்கள் கஷ்டங்களை அவர்களோடு சொல்வதைவிட நீங்கள் அந்த கஷ்டங்களிலிருந்து எப்படி மீண்டு வந்தீர்கள் என்பதைச் சொல்லுங்கள். ஏனென்றால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று சொன்னால் அவர்கள் கவனிக்க மாட்டார்கள். உங்களின் சந்தோஷமான பக்கங்களையும் குதூகலமான பக்கங்களையும் பகிருங்கள் நீங்கள் பள்ளிக்காலத்தில் எத்தனை சந்தோஷமாக இருந்தீர்கள் உங்களின் நட்பு பத்தி பகிருங்கள். வாரம் இரண்டு முறையேனும் உங்கள் குழந்தைகளின் கால்களுக்கு மசாஜ் செய்யுங்கள் செய்யும் பொழுது கட்டாயம் பேசுங்கள்.

கட்டாயம் மாற்றம் வரும் குழந்தைகளோடு நட்புக் கொள்வதற்கு மிகச் சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று.

-சுதா 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *