அடர்வனத்தில் சிக்குண்ட நான் கண்ட என் வாழ்வின்
அழகிய குடில் நீயே..
உன் கரம் கோர்த்து
காதல் ஊற்றுகளில் நீந்தியெழுந்து
மகிழ்ச்சியெனும் சிகரத்தில்
உடல் வியர்த்து மலையேறும்
சுமையும் சுகமே…
களைப்பில் பருக அளவில்லா மலைத்தேன்..
இணையில்லா இதழ்த்தேன்..
எனினும் தாகம்.. இன்னும் தாகம் ..
சிகரம் தொட்டேன் என்றெண்ணிய அடுத்த கணமே –
என்னை வாழ்நாள் சிறையடைத்தாய்
உன் பாதாளச் சிறையில்..
உன்னுயிருள் சென்று மரணித்து
பின் கண் விழிக்கும் வரமும் நீயே தந்தாய்..
வாதாட வழியின்றி வாயடைத்து நின்ற எனக்கு –
இதுவே உனது தீர்ப்பாயின்
நிதமும் வேண்டும் வாழ்நாள் முழுதும்,
உன் (இதயச்) சிறையில் தங்கும்
இந்த விடுதலையற்ற தண்டனை..
கவிஞர் மகேதா (Mahetha) – தோஹா (Doha)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

