Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: மகிழினி IFS – எஸ்.ஹரிணி

நூலின் பெயர் : மகிழினி IFS
ஆசிரியர் : ஈரோடு சர்மிளா
ஓவியம் : ஜமால்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : 48

ஒரு பள்ளி மாணவி தனது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வில் ஊக்கமடைந்து பிற்காலத்தில் வனத்துறை அதிகாரியாக மாறுவதை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலே “மகிழினி IFS”

மகிழினி, நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்த போதிலும், வனத்தின் மீதும், வனத்தில் வாழும் மலைவாழ் மக்களின் மீதும் நேசமும் பேரன்புமும் எப்படியெல்லாம் கொண்டிருக்கிறாள் என்பதை எழுத்தாளர் ஈரோடு சர்மிளா அவர்கள் மிக அழகாக நாவல் வடிவில் தந்துள்ளார்.

இக்கதையில் வலம் வரும் கதாப்பத்திரங்களான கெம்பா, மாதவி, மகேஷ், அமுதா,…..ஆகியோர் நம் அன்றாட வாழ்வில் எதார்த்தமாக வந்து செல்லும் சிறுவர் சிறுமியர் தான். ஆனால் கதைகளுக்குள் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வியக்க வைக்கிறது.

குழந்தைகளுக்கான நாவல் என்பதால், எளிய மொழி நடை, சிறு சிறு வாக்கியங்கள், மிகப் புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் என்று வாசிப்பதற்கு ஏதுவாக எழுதப்பட்டிருக்கிறது.

நகரத்தில் வாழும் குழந்தைகள் அறிந்துகொள்வதற்காகவே, மலைவாழ் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் இக்கதை விவரித்துச் செல்கிறது.

மலைவாழ் மக்கள் காலங்காலமாக கடைபிடித்துவரும், பழக்க வழக்கங்கள், அவர்களின் வெள்ளெந்தியான குணம் ஆகியவற்றை வாசிக்கும் போது நாமே நேரடியாக காட்டிற்குள் வலம் வந்ததைப் போன்றதொரு உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்நாவலில் வரும் ஒரு சில சம்பவங்கள், என் அம்மா சொன்னதை நினைவு கூர்கிறது. அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் சிறுவயதாக இருந்த பொழுது, அவர்களது பொதுவான உணவே கேப்பங்களியும் கீரையும் தானாம்.

மின்சாரமில்லாத காலகட்டத்தில் கிராமங்களில் மண்ணெண்ணெய் விளக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.  பொழுது சாய்வதற்கு முன்னதாகவே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, பெரியவர்கள் கதை சொல்ல அவர்களைச் சுற்றி குழந்தைகள் கதை கேட்பார்களாம்.

அதே போன்றதொரு வாழ்க்கையை இன்றளவும் பெரும்பாலான மலைவாழ் குழந்தைகள் வாழ்வதையும், ஒரு சில மலைவாழ் கிராம மக்கள் காலத்திற்கேற்ப மாறி வருவதையும் இக்கதையின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இக்கதையில் வனவிலங்குகளைப் பற்றிய குறிப்புகள் மிக அருமை. மனிதர்கள் தங்களது தேவைக்கேற்ப காடுகளை அழிக்கிறார்கள். வனவிலங்குகளின் பூர்வீக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். பிறகு விலங்குகள் மனிதர்களுக்கு இடையூறு செய்வது போன்றதொரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இக்கதையை வாசிக்கும் குழந்தைகள் சிறுவயது முதலே வனத்தைப் பற்றியும், மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றியும், வன விலங்குகளின் நடமாட்டம் குறித்தும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

இந்நாவலை வாசிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு வனத்திற்குள் சென்றுவந்த உணர்வைப் பெறுவார்கள் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.

இவ்வளவு அழகான நாவலைத் தந்ததற்காக எழுத்தாளருக்கு எனது நன்றியும், பேரன்பும்.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/magizhini-i-f-s/

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி

      இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு...

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம் வாடுகின்றனவே!! 4) இப்பொழுதெல்லாம் உன்னை அலைபேசியில்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – சேங்கை நாவல் – பாரத் தமிழ்

      எப்பேர்ப்பட்ட வாழ்வியலையும் துணிச்சலாகப் பதிவு செய்வது இந்தக் காலத்து படைப்பாளிகளுக்கு சாத்தியமே....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது – சந்துரு, ஆர்.சி

      ஒரு நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுவது எப்போதாவது நிகழும் ஆச்சர்யம் “அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” கவிதை தொகுப்பின் தலைப்பே பார்த்த மாத்திரத்தில் நமக்குள் பல்வேறு வினாக்களை எழுப்பிவிடுகிறது. ஒரு தலைப்பு நம்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – 1650 முன்ன ஒரு காலத்திலே – ப.பாக்ய லக்ஷ்மி

      இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்தவுடன் எனது மகனின் ஞாபகம் வந்தது. ஒரு சிறுமி ஒரு நாயுடன் இருக்கும், வளர்ப்பு பிராணி மீது ஈர்ப்புடையவர் எனது மகன், குறிப்பாக நாய் என்றால் மிகவும் பிடிக்கும்....

மு. அழகர்சாமியின் கவிதைகள்

      1) எதை எடுத்துச்சென்றாய் என்னிடமிருந்து தேடிக்கொண்டே இருக்கிறேன். நீ அருகில் இல்லாத இந்த நாட்களில். 2) தினமும் என் தூக்கத்தை திருடிக்கொண்டே செல்கின்றன உன் நினைவுகள்.. 3) ஒட்டு மொத்த அழகையெல்லாம் நீயே! வைத்துக்கொண்டாய்.. அங்கே! பூக்கள் எல்லாம் வாடுகின்றனவே!! 4) இப்பொழுதெல்லாம் உன்னை அலைபேசியில் அழைத்தால் தொடர்பு எல்லைக்கு வெளியே என்றே சொல்கிறது. உனக்கும் எனக்குமான காதலைப்போல.... 5) உன் பிறந்தநாளைத்தான் ரோஜாக்கள் தினமென அழைக்கிறார்கள். ஆம் அவையும் உன் இனம்தானே!   மு.அழகர்சாமி கடமலைக்குண்டு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here