மலரும் காதல் கவிதை – கவிதா ராம்குமார்

மலரும் காதல் கவிதை – கவிதா ராம்குமார்




நீ என் மீது காட்டும் அன்பில்
நான் திகைத்துப் போகிறேன்.
ஏனோ எனது அன்பை உன்னிடத்தில்
எனக்கு வெளிக்காட்ட தெரியவில்லை.

உனது ஆசை என்னவென்று கேட்டபோதெல்லாம்.
நீயோ நமக்குள் இருக்கும் காதலில்
நான் மட்டுமே ஜெயிக்க வேண்டுமென்றாய்.

என்னை சுற்றி இருப்பவர்களின் வஞ்சகத்தால்
நான் நிலைதடுமாறிய போதெல்லாம்.
நீ என்றும் எனது முதுகெலும்பாய்
எனது அருகில் நின்று என்னை
நிலைநிறுத்தியவனாய் இருக்கிறாய்.

இன்று நாற்பதைத் தாண்டினாலும்
அவ்வப்போது நமக்குள் நிகழும் ஊடலில்.
என்றோ அரும்பாக மலர்ந்த நமது காதலின் சாயலை
இன்றும் அதன் நறுமணம் குறையாமல் நினைவூட்டுகிறாய்.

என்றும் அன்புடன்…..நான்.

கவிதா ராம்குமார்
திருவண்ணாமலை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Neya puthuraja

    நல்ல முயற்சி தோழர்…வாழ்த்துகள்💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *