Subscribe

Thamizhbooks ad

கவிதை: மாமனார் – இரா. கலையரசி

 

 

 

மாமனார்

மகளின் பொழப்பப் பாக்க,
விடிகாலையில் பஸ் ஏறி
வெயிலுக்கு முந்தி
வந்துட்டாரு அப்பா.

கையில அஞ்சாறு
பழத்தப் புடிச்சிக்கிட்டு,
கருத்த உடம்பு
வியர்வைய வாசனை
திரவியமா பூசிருந்திச்சு.

மருமகனுக்குக் காய்ச்சல்.
“பாத்தே ஆகணுமுன்னு
பரிதவிச்சுப் போனாரு!
சொல்லாமல் கொள்ளாமல்
வண்டி ஏறிட்டாரு.

வெயிலுக்கு வாழ்த்து சொல்லி,
கண்ணயும் புருவத்தயும்
சுருக்கி, வீட்டுக்கு
வந்துட்டாரு.!

அப்பன பாத்ததும்,
“வாறதுக்கு முந்தி
சொல்லிட்டு வர
வேணாமா”ன்னு கூப்பிடுறா
மகள்.

எப்புடிப்பா இருக்கன்னு
கண்ணு மருமகனை தேடுது.
வெள்ள மாறாத சட்டயில,
வெள்ளந்தியா சிரிச்சுக்கிட்டு.

எதுக்கு வந்துகிட்டு
மெல்ல எட்டிப் பாக்குறாரு
மருமகன்.
வெள்ளப் பல்லு வெள்ளையடிக்க,
கையைப் புடிச்சு,
“இருக்கட்டும் மாப்பிள்ளை” னு
எதமா பேசுறாரு அப்பா.

ஆளுக வீட்டுக்கு
வந்து போக,
கொலு பொம்மையா
உக்காந்து இருக்காரு
பேச ஆளில்லாமல்
அப்பா.

“இந்தா வெளிய
போய் வாரே”னு
சொன்ன மாப்பிள்ளையும்
காணோம்.

“கடையில சோறு
வாங்கி குடுத்தா
சொரணை கெட்ட மகள்.”
வீட்டுக்கு வந்த
மருமகன் கிட்ட
“சொல்லிட்டு போகணுமுன்னு”
கெடயா காத்து கெடக்காரு
அப்பன்.

பைய புடிச்சு கிளம்ப,
மருமகன் வர
ஆட்டோ புடிச்சு
தரவா”ன்னு கேட்க,
ஒய்யாரமா நின்னு
பாத்துகிட்டு இருக்கு
ஊரையே ஏத்திக்கிட்டுப்
போன “காரு ”

– இரா. கலையரசி

 

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா

      கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத் தொடங்கும். எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று மெதுவாக பார்த்துக் கொண்டிருந்த நாம் பேருந்து வேகமாக செல்லத் தொடங்க முழுமையான பயணியாகி விடுவோம். அதுபோல,...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகள் அறிவித்தன. இல்லாத தங்கள் கடவுள்களின் பெயரால் அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். போரால் அனாதையாகிப் போயிருக்கும் எந்தவொரு குழந்தையிடமும் கேட்டுப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது வாழிடம், குடியிருப்பு, வீடு மற்றும் அலுவலகம், பல்வேறு காரணங்களுக்கான கட்டிடங்கள், தேவை என்பதை நாம் அறிவோம்! அவற்றை உருவாக்க உதவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here