ஜீவானந்தம் எழுதிய "மனதை வெளுப்பாக்கு" கவிதை | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

ஜீவானந்தத்தின் “மனதை வெளுப்பாக்கு” கவிதை

ஜீவானந்தத்தின் “மனதை வெளுப்பாக்கு” கவிதை

எண்ணெய் தேய்த்து அழுத்தி சீவப்பட்ட முடிகளைக் காற்றில் பறக்க விடு !

கருவளையம் வட்டமிட்டதை மறைப்பதற்கு குளிரூட்டும் கண்ணாடி அணி!

தெத்துப்பல்லைச் சீராக்கு!

உள்ளூர் ஆடை வேண்டாம் சூட் மாட்டி விடு!

கொஞ்சம் தொப்பையைக் குறைத்து விட்டுச் சிக்கென்றாக்கு!

தோலின் நிறம் பழுப்பு
வேண்டாம்
கொஞ்சம் வெளுப்பாக்கு!

வயல்வெளியில் விரியும் திரையை
சூடான நகரின் சாலையோரமாக்கு!

அடுக்கடுக்காய்க் கட்டளைகளைத்
தட்டச்சு செய்தான்

நவ நாகரிகத் தோற்றத்தின் வழியைக் கண்டடைந்தான்
செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு.

தன் இணை வேறொரு ஆணோடு உரையாடுவது கண்டு
மனதிற்குள் அரிவாளை நீட்டுகிற

பழகிய இரண்டாம் நொடி சாதி என்னவென்று துழாவிப் பார்க்கிற

ஈராயிரம் ஆண்டுக்கும் முந்தைய மனதை நவீனப்படுத்தும் தொழில்நுட்பம் கற்க வேண்டும் அவன்.

எழுதியவர் : 

✍🏻 ஜீவானந்தம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. ஆர். ரமணன்

    அருமை.
    ‘ மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான். மனிதனாக வாழ மட்டும் தெரியவில்லை ‘ என்கிற திரைப்படப் பாடலை நினைவூட்டுகிறது. நா.முத்துக்குமாரின் ‘ அப்பா வருடம் தோறும் கிணற்றை தூர் வருவார். மனதை தூர் வார மறந்து விட்டார் ‘ என்பதுடன் ஒப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *