நீ சுண்டி விடும்போது கண்ணீர்த் துளி
தூவும் போது மழைத்துளி
பாய்ந்து வரும் போது நீர் வீழ்ச்சி
பதுங்கித் தாக்கும் போது புயல்
கால்வாயில் போகையில் நீ ஓடைத் தண்ணீர்
கரை கொண்டு ஓடுகையில் ஆற்று நீர்
கடலில் மட்டும் கரிக்கும் உப்புநீர்
‘உப்பிட்ட வரை நினைக்கச்
சொல்லும் உனது விஸ்வரூபம்
எங்களின் உயிரிலும் வாழ்விலும்
நீ ( ர்) இல்லாமல் எதுவும் இல்லை
சில நேரம் பலரைக் காயவிட்டும்
உன் அருமையை உணர வைப்பாய்
அணைகளில் இருந்து கொண்டு
அரசியலுக்கும் துணை போவாய்
நீ எப்படியாகிலும் இருந்து கொள்
நாங்கள் உன்னை ‘ மழைநீர் உயிர்
நீர்’ என்று சாசனம் செய்து
வைத்திருக்கிறோம்
நீ மழையாய்க் கொட்டி எங்கள்உயிரை எடுத்து விடாதே
மன்றாடுகிறோம்….
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.