மண்ணில் உரம் போட்டு
உன்னைக் கொல்ல நினைத்தேன்
நீ செடியாக, மரமாக வளர்ந்தாய்
பூக்கள் கொடுத்தாய்
பழங்கள் கொடுத்தாய்
நிழல் கொடுத்தாய்
என் மகளின் திருமணத்திற்கு
உன்னில் ஒரு பகுதியை
வெட்டி கட்டில் பீரோ
செய்து கொடுத்தேன்
மகள் மகிழ்ந்தாள்
மீண்டும் நீ துளிர் விட்டாய்;
மழை காலத்தில்
உன் கிளைகள்
என் வீட்டுக் கூரையானது
இதோ என் பேரக் குழந்தைகள்
ஊஞ்சல் கட்டி உன் மேல் ஆடுகிறார்கள்
காலம் கடக்கிறது
காலன் என்னை அழைக்கிறான்
இப்போதும்
உன் மேல் தான் நான் கிடத்தபட்டுள்ளேன்
இத்தனை செய்தும்
நீ எனக்கு நல்லவற்றை
மட்டுமே கொடுத்தாய், ஏன்?
என்ற மானுடனின் கேள்விக்கு
நகைத்து கொண்டே
சுமந்து கொண்டிருந்த
மரம் கதைத்தது
என்னிடம் இருந்ததை நான்
கொடுத்தேன்
உன்னிடம் இருந்ததை நீ கொடுத்தாய்
இருப்பதைத் தானே கொடுக்க முடியும் என
பதில் இல்லாமல்
எரிந்து கொண்டிருக்கிறேன்
மின்சார சவகிடங்கில்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

