நீள் மௌனங்களை
உடைக்கும் முதல் சொல்
நீள் வாதங்களை
உடைக்கும் முதல் மௌனம்
இதற்கு நிகர் உண்டோ?
நீண்ட மௌனங்களும்,
நீண்ட வாதங்களும்,
வீரியமற்றதே!
மௌனம் சில நேரம்
வெல்கிறது!
மௌனம் சில நேரம்
கொல்கிறது!
உலகின் மாபெரும்
திறந்தவெளி சிறை
மெளனம்!.
மௌனத்தை உடைத்தே
பூக்களும் புரட்சியும்
மலர்கின்றன!.
வாயைக் கட்டியதும்
சப்தங்கள் நின்று போயின
மனதின் கூச்சல் மட்டும்
இன்னும் அடங்கவில்லை!.
வார்த்தைகளை விற்றுவிட்டு
மௌனத்தை வாங்கி வையுங்கள்
மௌனத்தின் செலவு அவசியம் தேவை!.
மெளனங்களாலயே
பட்டை தீட்டப்படுகின்றது
மனம்!
அவளது கண்கள்
என் இதயத்தை களவாடி
மெளனத்தால் பேசுகின்றது!
அருகினில் அமர்ந்திருந்தும்
மௌனத்தின் பெருவெளியை
கடக்க முடியவில்லை!
கருவறைக்கும், கல்லறைக்கும் இடையே
மௌனம் வார்த்தைகளால்
வெட்டி வீழ்த்தப்படுகின்றது!
மெளனத்தைக் கலைக்க
சப்தங்கள் தேவையில்லை
இளந்தென்றலின் தீண்டல்
போதும்!
மனதின்
மெளனமே ஞானம்!.
ரா.சிவக்குமார்
சென்னை
9884824086
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

