ஹோ சி மின் (Ho Chi Minh) மே 19, 1890இல் பிறந்து செப்டம்பர் 2, 1969இல் மறைந்த இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சியின் (1930) நிறுவனர் மற்றும் 1945 முதல் 1969வரை வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் (வடக்கு வியட்நாம்) தலைவராக இருந்தார். ஹோ சி மின் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வியட்நாமிய தேசியவாத இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார், முதலில் ஜப்பானியர்களுக்கு எதிராகவும், பின்னர் பிரெஞ்சு காலனித்துவ சக்திக்கு எதிராகவும், அதன் பின்னர் அமெரிக்க ஆதரவு பெற்ற தெற்கு வியட்நாமியர்களுக்கு எதிராகவும் போராடினார்.
ஹோ சி மின்னின் சிந்தனையானது, பொருளாதார சிந்தனை, அரசியல் சிந்தனை, தத்துவ சிந்தனை, தார்மீக சிந்தனை மற்றும் கலாச்சார சிந்தனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. வியட்நாமின் சோசலிசத்திற்கு மாறுவதில் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய பங்கை ஹோ சி மின் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்தார். அவரைப் பொறுத்தவரை, பொருளாதார வளர்ச்சியின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது, பழைய பொருளாதாரத்தைப் புதுப்பிப்பது மற்றும் புதிய ஒன்றை உருவாக்குவது ஆகும். வறுமை மற்றும் பின்தங்கிய நிலையை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி என்பது கலாச்சார வளர்ச்சிக்கான அடித்தளம் மற்றும் அடிப்படையாகும். சமூக முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்குப் பொருளாதார வளர்ச்சி ஒரு முக்கியமான நிபந்தனையாகும் என்றார்.
“மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து மேம்படுத்த, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சிக்குக் கட்சி ஒரு நல்ல திட்டத்தை வைத்திருக்க வேண்டும்” என்று ஹோ சி மின் கூறினார். ஹோ சி மின், நாம் செய்ய வேண்டியவை என்று பட்டியலிடுகையில்,
1. மக்களைச் சாப்பிட வைப்பது,
2. மக்களை உடை அணிய வைப்பது,
3. மக்களை வாழ்விடம் பெற வைப்பது
4. மக்களுக்குக் கல்வி கிடைக்க வைப்பது போன்றவையாகும்.
வியட்நாமின் ஜனாதிபதியாக, வேளாண்மை, தொழில் மற்றும் வணிகத்தின் வளர்ச்சியில் அவர் மிகுந்த கவனம் செலுத்தினார். உணவு மற்றும் உடை மக்களுக்கு அவசியமானவை என்பதால், வேளாண் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும், பெரும்பாலான மக்கள் வேளாண் விவசாயிகள், அரசாங்கம் பெரும்பாலும் வேளாண்மையையே சார்ந்துள்ளது என்கிறார். வேளாண்மை வலுவாக இருந்தால், நாடு வலிமையானதாக இருக்கும் என்றும், நாடு வளமாக இருந்தால், விவசாயிகளும் செல்வந்தர்கள் ஆவார்கள் என்றும் அவர் நம்பினார்.
சோசலிசத்திற்கு மாறும்போது, பல துறை பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று முதன்முதலில் ஆதரித்தவர் ஹோ சி மின். உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியில் அவர் சிறப்புக் கவனம் செலுத்தினார். ஹோ சி மின் பொருளாதார மேலாண்மை மற்றும் விநியோக உறவுகளில் மிகவும் ஆர்வமாக உள்ளார். சோசலிசத்திற்கு மாறும்போது பொருளாதார கட்டுமானம் மற்றும் மேம்பாடு குறித்த அவரது கருத்துக்கள் எளிமையான மற்றும் புரிந்துகொள்ள எளிதான முறையில் வழங்கப்படுகின்றன, அவர் நாட்டின் வளர்ச்சியில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றார்.
ஆதாரம்
Huynh Thi Gam (2021): “Ho Chi Minh’s thought about Econpomics and the thought value for Vietnam today” xllkogretim, Vol. 20, No.5.
www . hilkogretim-online.org ; www.nveo.org ; www.m.tapchiqptd.vn
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

