கவிதை : மழைக்கால வாழ்க்கை (Mazhaikkala Vaazhkai) - ஆதன் ஆரா - Tamil Kavithaikal - Bookday Kavithaikal - https://bookday.in/

கவிதை : மழைக்கால வாழ்க்கை – ஆதன் ஆரா

கவிதை : மழைக்கால வாழ்க்கை – ஆதன் ஆரா

கார்காலக் கிறுக்கல்கள்
பூமிக்குத் தந்த மழையில் நனைந்தபடி
தன் வீட்டின் முகவரி
தேடி ஓடுகிறது ஒரு வாழ்க்கை

மேட்டின் முகவரி
தேடி ஏறுகிறது ஒரு வாழ்க்கை

ஏட்டின் முகவரி
ஏறி புரட்டுகிறது ஒரு வாழ்க்கை

கேட்டின் முகவரி
அடைந்து அமர்ந்தும்
தள்ளாடுகிறது ஒரு வாழ்க்கை

பணக்கட்டின் முகவரி
பாதுகாக்கும் கடவுச்சொல் பூட்டின்
திறவுகோலை கைக்குள் ஒளித்தபடி
ஓய்வைக் கழிக்கிறது ஒரு வாழ்க்கை

இருட்டின் முகவரி
எங்கே என்று
ஏங்கித் தவிக்கிறது ஒரு வாழ்க்கை

பாட்டின் முகவரி
உள்ளே சென்று
வெளியேவர முடியாதபடி
மாட்டிக் கொள்கிறது ஒரு வாழ்க்கை

சுடுகாட்டின் முகவரி
நோக்கிப் பயணமாகிறது ஒரு வாழ்க்கை

காட்டின் முகவரி
உள்ளே தாக்குப்பிடிக்க முடியாமல்
ஆற்றின் போக்கில்
மிதந்து வருகிறது ஒரு வாழ்க்கை

கூட்டின் முகவரி
அடைய முடியாமல்
அரை உயிரோடு
நடுங்கியபடி நிற்கிறது ஒரு வாழ்க்கை

இவை எல்லாம்
கண்ணில் கொண்டும்
கருத்தில் கொள்ளாது
காற்றின் முகவரி
தேடி அலைகிறது ஒரு வாழ்க்கை

எழுதியவர் : 

-ஆதன் ஆரா
( க. ராமச்சந்திரன் )

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Show 1 Comment

1 Comment

  1. க ராமச்சந்திரன்

    நெஞ்சார்ந்த நன்றி. 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *