கோட்சேவைக் கூட திருத்திட லாம்…
காந்தி மறுமுறை பிறப்பாரா…
சாணிப்பால் மொத்தை சௌக்கடி நூறு புசித்திடலாம்..
அம்பேத்கர் இங்கு உதிப்பாரா…
அடுக்களைக்கு விறகாகி ஆதிக்க இரையாகலாம்
பாரதி எழுந்து வருவானா..
நூறு ஆண்டு கூடுதலாய்..
பரங்கியர் பல்லக்குச் சுமக்கலாம்.
நேதாஜி மீண்டும் கிடைப்பாரா..
பட்டினி உண்டு ஆண்டானுக்கு பழுதாகலாம்
மார்க்ஸ் புரட்சி வெடிக்குமா..
சிறுத்தும் கருத்தும் வாழ்கிறோம்..
புலங்கள் பலதும் பெயர்கிறோம்..
மீண்டும் புலருமா ஆகஸ்டு பதினைந்து …
து.பா.பரமேஸ்வரி
சென்னை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

