Subscribe

Thamizhbooks ad

மீண்டெழும் வேங்கைகள் – நூல் மதிப்புரை | ரேகா ஜெயக்குமார்

புத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு.

யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.

இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால் நட்சத்திரத்தின் மாயம் குறித்து விளக்குகிறது.

🦟மழையில் எப்படி கொசு பறக்கிறது?🦟

வானத்தில் இருந்து வீழ்கின்ற மழைத்துளியானது கொசுவைப் போல் ஐம்பது மடங்கு எடை கொண்டிருந்த போதும் பெய்கின்ற மழையினூடே எவ்வாறு கொசு பயணிக்கின்றது என்பதை பற்றி விளக்குகிறது.

🐆மீண்டெழும் வேங்கைகள் 🐆

இக்கட்டுரையை படிக்கும் வரை Cheetah என்பதை சிறுத்தை என நினைத்திருந்தேன்.ஆனால் உண்மை அதுவன்று.

Cheetah என்பது வேங்கையாகும்.Leapord தான் சிறுத்தை.
வேங்கை என்னும் விலங்கு சிங்கம்,புலி,சிறுத்தைப்புலி ஆகியவை அடங்கிய பெரும்-பூனை குடும்பத்தை சார்ந்த விலங்காகும்.

இந்திய நாட்டில் வேங்கைகள் இல்லை என்று நம் இந்திய அரசு 1952 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டது.வேங்கை விலங்கின் உடலமைப்பு,அதன் சிறப்பு, முகாலய காலத்தில் வளர்ப்பு விலங்காக பழக்கப்பட்ட வேங்கை போன்றவற்றை பற்றி விவரிக்கின்றது.

🐈பூனை குடிக்கும் பால்🐈

பூனையிடம் வைக்கின்ற பாலானது தரையில் சிந்தாமல் சிதறாமல் பருகுகின்ற ஆற்றல் பூனைக்கு மட்டும் உள்ளது.ஆனால் நாய்க்கு இவ்வாற்றல் இல்லை.ஏன்? என்று கேள்விக்கு பதில் அளிக்கிறது இக்கட்டுரை.

🔍கண்ணாடியே!சுவர் கண்ணாடியே..!🔎

ஒரு மனிதன் தன் உடலை கண்ணாடியில் பார்க்கும் போது இது நான் தான் என்று அறுதியிட்டு கூற முடிவதைப் போல எந்தெந்த விலங்குகள் தன்னை கண்ணாடியில் பார்க்கும் போது இது நான் தான் என்பதை தன் உடல் அசைவுகள் மூலம் எவ்வாறு நிரூபிக்கச் செய்கின்றது பற்றி தெரிவிக்கின்றது.

🌴தென்னையின் தாயகம் எது?🌴

பல்வேறு நாடுகளில் காணப்படுகின்ற தென்னை மரம் மற்றும் தேங்காயின் அமைப்பு,ஏன் தேங்காய்க்கு “Coconut” என ஆங்கிலத்தில் பெயர் வந்த காரணத்தை பற்றி தெரிவிக்கின்றது.

ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான அறிவியல் பார்வையும் விளக்கத்தையும் கொண்டுள்ளன.

ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்.
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்.
₹ : 40/-

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here