வலி தாங்கு
விசை கொண்டு எழு
உன் கனவுகளை மெய்ப்பி
காதல் வலி
இதயங்களில் உலாவும்
கண்ணீர் ஊற்றெடுக்கும்
கசிந்து கசிந்து மெதுவாக விசும்பும்
கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்
காதலில் கரைந்தோடும் இதயம்
காற்றாய் அலையும் அன்பின் ஆவி
மகத்தான சல்லிப்பயல்
வேளா வேளைக்கி சாப்பிடுகிறான்
தூக்கம் வராமலே
தூங்குவதாய்ச் சொல்கிறான்
என் சொல் உன் சொல்
வன் சொல் தீர்ந்திட மென் சொல்
முளைக்கிறது இன் சொல்
வெட்கத்தைத் தின்றுவிடு
வெட்கம் தின்றுவிடும்
வெட்கமே காதலின் சத்ரு
கடந்து போவது விடுதலையின் களிப்பு
கண்ணீரா? மகிழ்ச்சியா?
எல்லாம் ஒன்றுதான்
தயங்கித் தேங்குவதால்
பாரங்கள் லேசாவதில்லை
இம்மை எரிகடல்
மறுமை இருட்கடல்
இன்மையில் போகிறது என் படகு
வாலாட்டுபவை வாய் மூடியிருக்கும்
குனிந்தபடி திரிபவை
அரவம் காட்டா
ரோசமானவை
குரலெழுப்பி நடுங்க வைக்கும்.
– வசந்ததீபன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

