“கதவிற்குப் பின்னொரு குழந்தை” — திருமதி. சாந்தி சரவணன்

“கதவிற்குப் பின்னொரு குழந்தை” — திருமதி. சாந்தி சரவணன்



“கதவிற்குப் பின்னொரு குழந்தை”

மூடிய விழிகளில் உறக்கமில்லை
இரவு கரைந்தது
அதிகாலையில் கண் விழித்து
குளித்து, சமைத்து
வேலைகள் முடித்து
பறவை போல் பயணித்து
அலுவலகம் அடைந்த‌தும்
சட்டென்று நினைவு
கதவு தாழிட்டேனோ  ?
என் மகள் கண் விழித்திருப்பாளோ?
குழந்தை காப்பாளார் வந்திருப்பாரோ?
“எல்லாம் அவளுக்காக” !
“அவளைப் படிக்க வைக்க”
“வசதியான வாழ்க்கை அமைக்க”
என சமாதானப்படுத்திக் கொண்டாள் அலுவலகத்தில்.
வீட்டில் விழித்தெழுந்த குழந்தை
அம்மாயில்லாத படுக்கையறை கண்டு
அஞ்சினாள்
வாசல் மூடியிருந்தைக் கண்டு கலங்கியவளுக்கு
நினைவு வந்தது
“அம்மா ஆஃபிஸ் போய்ட்டாங்க”
அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கிய
தருணம் மறந்து
அச்சத்தால்
அரண்டும்
மிரண்டும்
“கதவிற்குப்  பின் காத்திருந்தாள்”
பட்டினியோடு
“ஒரு கப் பாலுக்காக”
கண்ணில் படவில்லை
இன்னும் காப்பாளர்!

           — திருமதி. சாந்தி சரவணன்



Show 9 Comments

9 Comments

  1. V.PAPPU RANI

    இன்றைய சமுதாயத்தின் நடைமுறை நிதர்சனம்
    கவிதையில் தெரிக்கிறது.வாழ்த்துகள் தோழர்.

    • சாந்தி சரவணன்

      நன்றி தோழர்

  2. Rathika vijayababu

    ஒரு தாய்க்காக குழந்தை ஏங்குவதும் குழந்தையை நினைத்து தாய் இன் பரிதவிப்பையும் கண்முன்னே காட்டி உள்ளது. சிறப்பு தோழர்

    • சாந்தி சரவணன்

      நன்றி தோழர்

  3. ரசிகா. சு

    அருமை அம்மா…..இன்றைய உலகின் அனுதின தவிப்புகள் ….உங்கள் கவிதையில் வரிகள் கண்முன் ,காணொலியாக வந்து போனது…….

    • சாந்தி சரவணன்

      நன்றி மா

  4. Priya Jayakanth

    சில வரிகளில் பேரும் அதிர்வை அளிக்கிறது. வாழ்த்துகள் பா

    • சாந்தி சரவணன்

      Thank you priya

      • Shanmugalakshmi R

        அருமை சாந்தி மா.சம கால வாழ்வியல் நிதர்சனத்தை பிரதிபலிக்கும் கவிதை.மிரண்டது குழந்தை மட்டுமல்ல வாசித்த நானும் தான்.
        சிறப்பு மா👌👌👌👌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *