தோழர் நாறும்பூநாதன், “நீங்கள் ரசிப்பீர்கள்என்ற குறிப்போடு ஒரு சிறுகதையை அனுப்பி இருந்தார் . கதையைச் சொல்லுமுன், கதாசிரியர் செந்தில் ஜெகன்நாதன் இந்த ஜனவரி 30 அன்று தமிழினி இணையதளத்தில் வெளியாகி உள்ள தனது கதையை யாருக்கு அர்ப்பணித்துள்ளார் என்பது இன்னும் சுவாரசியமானது: ” நாதஸ்வர கலாநிதி காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களுக்கு அகம் பணிந்து சமர்ப்பணம்“.

அனாகத நாதம் என்பது கதையின் பெயர். தன்னியல்பாக எழும் இசை இன்பம் என்பது பொருள் என்கின்றனர்சாமிநாதன் நாதஸ்வரத்தை எடுத்துக் கொண்டு ஒரு நெரிசல் மிக்க பேருந்தில் ஏறிப் பயணம் செய்கிறான்அவனது தந்தை மிகப் பெரிய சங்கீதக்காரர். அவனும் மிகப் பெரிய குருவிடம் கற்றுக் கொண்டவன். அந்த நாதஸ்வரக் கருவி எப்படியாகப் பட்டது, செந்தில் ஜெகன்நாதன் வருணிப்பில் கேட்போம்:

“………அது சாமிநாதனின் அப்பாவுக்கு நாதஸ்வரத்தில் ஆர்வம் துளிர்த்தபோது அவனது தாத்தா நரசிங்கம்பேட்டை ரங்கநாதன் ஆசாரியிடம் செய்து வாங்கிவந்த நாதஸ்வரம். அப்பா உயிரோடு இருந்தவரை அதைத் தொடாத நாளில்லை. அந்த வாத்தியத்தின் ஒவ்வொரு துளைகளைச் சுற்றியும் படிந்திருக்கும் அப்பாவின் விரல் ரேகைகளுக்கு ராகங்கள்இதோ வந்தேன் ராஜாவேஎன்று பணிந்து வரும்….”

ஆனால், இப்போது சாமிநாதன் போய்க் கொண்டிருப்பது கச்சேரி செய்ய அல்ல….தனது உயிரினும் மேலான இசைக்கருவியை யாருக்கேனும் விற்று விட…. ஏனாம்அது தான் அனாகத நாதம் கதை. வாசகர்கள் அவசியம் படிக்க, இங்கே இணைப்பை இணைத்துள்ளேன்:

https://tamizhini.in/2023/01/30/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

சிறுகதை வெளியான அடுத்த நாளே கேள்விப்பட்டு உடனே வாசித்த போது இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது. ஆனாலென்னவிட்டுவிட முடியுமா என்னதோழர் நாறும்பூநாதன் தொடர்பு எண்ணையும் சேர்த்தல்லவா அனுப்பி இருந்தார்செந்தில் ஜெகந்நாதன் அவர்களை அழைத்து வாழ்த்தவும் மிகவும் நெகிழ்ந்து போனார். திரைத் துறையில் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருக்கும் அவருக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை

அவரிடம் உண்மையைச் சொன்னேன், எனக்கு இசை ஞானமோ, நுணுக்கங்கள் பற்றிய அறிவோ கிடையாது, வெறும் ரசிகன் என்று. அவரோ தானும் அப்படித் தான் என்று சொல்லிவிட்டு அப்படியல்ல என்பதை ஏற்கெனவே கதையில் மெய்ப்பித்தது மட்டுமின்றி உரையாடலில் அருமையான செய்திகள் பகிர்ந்து கொண்டதிலும் தன்னையறியாமல் வெளிப்படுத்தி விட்டார்

காருகுறிச்சி அவர்களுக்கு உங்கள் கதையை அர்ப்பணித்து இருப்பது சிறப்பானதுஎன்று நான் குறிப்பிடவும், பேச்சு, சிங்கார வேலனே பாடலை நோக்கி நகர்ந்தது. சுவாரசியமான விஷயம் சொன்னார், செந்தில் ஜெகன்நாதன்…. சிங்கார வேலனே பாடலைப் பதிவு செய்துவிட்டுப் பிறகு கேட்கையில் வேறு ஒரு மெல்லிய குரலும் கூடவே பாடிக்கொண்டிருந்தது கேட்டதாம், உற்று கவனித்துக் கேட்டபோது தான், அது வேறு யாருமல்ல, வெங்கடேசன் அவர்களது குரல் என்று புரிந்ததாம்யாரவர்புகழ்பெற்ற நாச்சியார்கோயில் ராகவ பிள்ளையின் சீடர் பெரும்பள்ளம் வெங்கடேசன், பிரபல தவில் வித்வான், காருகுறிச்சி அவர்களுக்கு அணுக்கமாக வாசித்துப் புகழ் பெற்றிருந்தவர்.  (கீழப்பெரும்பள்ளம் என்று இன்னும் துல்லியமாகக்  குறிப்பிட்டார் செந்தில் ஜெகன்நாதன்).  வெங்கடேசன் தவில் வாசிக்கையில் அதற்கான பதங்களை உச்சரித்தபடியே தான் வாசிப்பாராம். சிரமத்தோடு அதைப் பாடல் பதிவில் இருந்து அழித்தனர் என்றார் ஜெகன்நாதன்

இப்பேற்பட்ட முக்கிய கலைஞரைப் பற்றி தி இந்து நாளேட்டின் கோலப்பன் சார் நிச்சயம் எழுதி இருப்பாரே….. என்று கூகிள் சர்ச் போட்ட அடுத்த நொடி, அற்புதமான கட்டுரை கோலப்பன் அவர்கள் எழுத்தில் காணக் கிடைத்தது. ‘பாடல் பெறாத கலைஞர்கள்என்ற தலைப்பில் புகழ் பெற்ற தவில் கலைஞர்கள் சிலரைப் பற்றிய அந்தப் பதிவில் வெங்கடேசன் அவர்களது அபார மேதைமை பற்றிய வாக்கியங்கள் கடைசி பத்தியில் இடம் பெற்றுள்ளது. அதைவிடவும் பேரானந்தம், பெரும்பள்ளம் வெங்கடேசன் அவர்களது புகைப்படம் கட்டுரையின் முகப்பில் இருப்பது….ஆஹாவேறென்ன வேண்டும்!  

https://www.thehindu.com/news/national/tamil-nadu/unsung-artistes-behind-classic-musicals/article7938848.ece

நாத கலாநிதி காருகுறிச்சி அவர்களது நூற்றாண்டு கொண்டாட்ட நேரத்தில் தவில் கலைஞர் பொன் சண்முகம் அவர்கள் தாள வரிசைகள் வாய் மூலமாக விவரித்து விளக்கும் அருமையான காணொளி ஒன்றும் தேடலில் சிக்கியது.

அதில் தனது குருநாதர் என்று அவர் மிகுந்த மதிப்போடும் பணிவோடும் குறிப்பிடுவது பெரும்பள்ளம் வெங்கடேசன் அவர்களைத் தான்இந்தத் தாள கணிதத்தில் செம்மையான ஆசான்கள் என்று வெங்கடேசன் அவர்களையும் சிக்கில் குஞ்சு சிங்காரம் பிள்ளையையும் குறிப்பிட்டே சண்முகம் தனது பாடத்தை விளக்குகிறார்.

வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம்என்கிற இலக்கிய வாசகத்தை மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி தமிழ்த் துறை தலைவராக இருந்த குரு சுப்பிரமணியன் அய்யா அவர்கள் அடிக்கடி சொல்லிக் கேட்டதுண்டு. குருசிஷ்ய பாரம்பரியம் என்பது கலைகளின் ஆணிவேர். அதே போல் சக கலைஞர்களைப் பாராட்டுதல், அடுத்தவர் திறமை மெச்சுதல் என்பது இன்னும் மேலான பண்பாக்கம் ஆகும். உயிரியற்கை அந்தப் பண்பு. பறவைகளைப் பார்க்கும் தொறும் இந்த உணர்வு மேலிடுகிறது

ளமைக் காலத்தில் காஞ்சிபுர வாசத்தில் பாட்டி வீடு ஒரு ரயில்வே சந்திப்பு. எங்கிருந்தும் எங்கே செல்வோரும் என் பாட்டி பத்தாணியைப் பார்த்து இரண்டு வார்த்தை பேசிவிட்டு அவள் அன்பு மணக்க வழங்கும் தண்ணீர் கலந்த பாலில் கலந்த கட்டங்கடு காப்பி குடிக்காமல் செல்வதில்லை. பாட்டியின் வீட்டுக்கு விடாமல் வருகை தருவோரும் உண்டு. எப்போதேனும் அரிதாக வந்தாலும், ஒருபோதும் மறக்க முடியாத உறவினர்கள் சிலரும் உண்டு.   திரைப்பாடல்களில் கூடத் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்கள் உண்டு. சில பாடல்கள் அரிதாகவே வந்து ஒலிக்கும், ஆனாலும், அடுத்த சில தினங்களுக்கு உள்ளூர எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

அப்படியான இரண்டு பாடல்களுக்கும் பறவைகளுக்கும் கூடத் தற்செயல் ஒற்றுமை இருக்கிறது. ஒன்று மெல்லிசை மன்னர் இசையமைத்தது. மற்றது இசை ஞானியின் இசையில். ஒன்று கண்ணதாசனின் கை வண்ணம். அடுத்தது அவரது உதவியாளராக இருந்த பஞ்சு அருணாச்சலத்தின் புனைவு. ஒன்று காதலில் காத்திருத்தலின் அவஸ்தை. அடுத்தது, இளமைக் கனவுகளின் சிறகடிப்பு. ஒன்று ஏக்கத்தின் விம்மல். மற்றது ஆசைகளின் அறைகூவல். இரண்டு பாடல்களுமேகுருநாதர்களை மட்டுமின்றி சக கலைஞர்களையும் கொண்டாடும் எஸ் பி பாலசுப்பிரமணியன் இசைத்ததுஇரண்டுமே இளமைத் துடிப்பில் ரசிகர்களை வசீகரித்த கமல் ஹாசன் நடித்த படங்களில் இடம் பெற்றது.

நினைத்தாலே இனிக்கும் படமே, இன்னிசை மழை என்ற அறிவிப்போடு தான் வெளியானது. மிக அதிகம் பேசப்படும் பாடல்கள் பல உண்டு என்றாலும், ஆங்கிலத்தில் ஆரம்பித்துத் தமிழுக்கு மாறும் நெஞ்சுக்கு மிகவும் இதமான இந்தப் பாடலின் இசையே பறவைகளின் இதயத் துடிப்பாக அமைத்திருப்பார் எம் எஸ் விஸ்வநாதன். கிடார் மீட்டல் உள்ளத்தை இன்னும் அருகே வந்து வருடிச் செல்லும். தாளக் கருவிகள் உள்ளத்தின் படபடப்பை பேசிக்கொண்டே இருக்கும். காதல் ஏக்கத்தில் இதயத்தின் கரைதலை விசில் ஒலியால் கடத்த வைத்திருப்பார் மெல்லிசை மன்னர். இந்த தாபத்தைப் பறவைகளை முன்னிலைப்படுத்திக் காட்சிப்படுத்தி இருப்பார்கள் திரைப்படத்தில்

பாடலை கிடார் தான் தொடங்கி வைக்கிறது…… அன்பின் பதட்டத்தைச் சிதற விடுகிறது திசையெங்கும்…..வாட் வெய்ட்டிங்வாட் வெய்ட்டிங் (எனக்கென்னவோ வாட்டர் வெய்ட்டிங் என்று தான் தோன்றிக் கொண்டிருக்கிறது) என்று தொடங்கும் எஸ் பி பி, உரையாடலை ஓர் இனிய பறவையோடு நிகழ்த்துகிறார்…. லவ்லி பெர்ட் டெல் மை டார்லிங் என்று!   யூ ஆர் வாச்சிங்யுர் வாச்சிங்என்கிற சுய கழிவிரக்க வரியிலிருந்து, ‘லவ் இஸ் பட் கேம் ஆஃப் வெய்ட்டிங்’ அடுத்த கட்டத்திற்குச் செல்லுமிடம் உள்ளத்தைத் தொடும்

அங்கே பாடல் தமிழுக்கு மாறுகிறது…. காதலுக்குத் தான் மொழியில்லையே….’காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல் மனம் நோகும் வரை….’ அந்தக்காதல்’ என்கிற சொல்லில் தான் எத்தனை உள்ளுணர்வுகளை இழைத்து விடுகிறார் பாலுஅந்த நோதல் சற்று நீட்டித்து ஒலிக்கிறது 

பொருத்தமாக. ‘பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்பச்சைக் கிளி சாட்சி சொல்லு…’ அந்த சாட்சி சொல்லு என்கிற இடத்தில் காதல் புகாரை இன்னும் இலக்கியப் படுத்துகிறார் கண்ணதாசன்.  ‘நாற்று நட்டுக் காத்திருந்தா நெல்லு கூட விளைஞ்சிருக்கும்என்பதில் ஓராயிரம் செய்திகள் இருக்கிறது. விவசாயி நாற்று நட்டு விட்டுச் சும்மா காத்திருப்பதில்லைஅந்த நாற்று காத்திருக்கிறது அடுத்தடுத்த கவனிப்புக்கு, அப்புறம் நெல்லாகிறது! காதல் பயிரின் தவிப்பைத் தான் கவிஞர் கொண்டு வந்து சேர்க்கிறார்…. ‘காக்க வச்சுக் கன்னி வந்தா காதல் உண்டா கேட்டுச் சொல்லுஎன்பதில் மற்றும் ஓராயிரம் செய்திகள்!  ‘கன்னி வந்தாஎன்கிற சொற்களை பாலு என்னமாக இழைக்கிறார்…. ‘கேட்டுச் சொல்லுஎன்கிற இடத்தில் நோதலின்  ஆழப் பதிவு!

அங்கிருந்து பறவைகளின் படபடப்பாக, கொஞ்சுதலாக, சீண்டலாக, ஊடலின் வரைபடமாக, மீண்டும் சேர்தலின் இன்பமாக கிடார் ஒலித்துக் கொண்டே போகிறது. இதம் பதமாக ஒலிக்கிறது மென் தாளம்பல்லவியை விசில் எடுத்துக் கொள்கிறது….பாலுவிடம் பல்லவி மீண்டும் வந்தடைய பாடல் இசையின்பமாகப் பின்னர் நிறைவு பெறுகிறது.   ஊடே உள்ளத்தை வருடும் பெண் குரலில் ஹம்மிங் பாடல் இன்பத்தை மேலும் கூட்டுகிறது. ஒரு சில்லென்ற காற்று, நீர்ப்பரப்பில் பட்டுத் தெறிக்கக் காற்றில் பறவைகளோடு நாமும் சேர்ந்தே சிறகடித்துப் பறக்கும் உணர்வைக் கிளர்த்தும் பாடல்.

ஹேய்….ஹேய்ஓராயிரம்…”  பாடல், மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல்களில் ஒன்று. இசைக் கருவிகளின் காதல் சந்தங்கள் புல்லாங்குழல் வழியேயும், வயலின்களின் வில்லில் இருந்தும், கிடாரின் மொழியிலும் எப்படி தித்திக்கும் என்பதை ராஜா அசாதாரண கலவையாகக் கலந்திருப்பார் இந்தப் பாடலில்

ஒற்றைக் குயில் கூவுகிறதுஅதன் பேடை அதை அப்படியே வாங்கித் திரும்பக் கூவுகிறது….குகுகுக்குக் குக்கூ குக்கு குக்கூ என்று தான் தொடங்குகிறது பறவையின் ஒலிக்குறிப்பாகப் பாடல்…. ஒரு குழந்தை புதிதாகக் கற்றுக் கொண்டதைத் திரும்பத் திரும்ப உச்சரித்து உச்சரித்து ரசித்து மகிழ்ந்து கொள்வது போலவே, காதல் இளம் ஜோடிகள் தங்களுக்குள் பழகிக் கொள்ளும் சொல்லின்பங்களைத் திரும்பத் திரும்ப பரஸ்பரம் பரிமாறிக் குதூகலித்துக் களிப்பார்கள். பாடலின் சந்தத்திற்காக ராஜா, ‘ஹேய் ஹேய்என்ற பதத்தை அத்தனை கற்பனையோடு வந்தடைந்திருக்கிறார். அதைவிட நெருக்கமான விளித்தல் என்ன வாய்க்கும்!

பல்லவியும் சரணங்களும் ஊடாக ஒலிக்கும் இசையாக மிகக் குறைந்த கால அளவிலேயே நிறைவு பெற்று விட்டாலும் பாடலின் இதமான தாளக்கட்டும், பாலுவின் ரசனைக்குரிய குரலும், அதில் தெறிக்கும் கற்பனை நிறைந்த பாவங்களும் உள்ளத்தில் தோய்ந்து விடுகின்றன.

ஹேய் ஹேய்..ஓராயிரம்ஹேய் ஹேய் ஓராயிரம்என்ற பல்லவியின் முதல் வரியிலேயே பாடல் முழுவதும் பரவும் பதமான தாளக்கட்டு குறித்த சித்திரம் தீட்டி விடுகிறார் ராஜா. மலர்களே மலர்ந்ததுஉலகிலே சுகமே இது தானோஎன்கிற வரிகளின் சொற்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை சங்கதிகளும், நுட்பங்களும் நீட்சியும்….சொக்க வைக்கும் மயக்க ரசக் கோப்பை ஏந்தி ஒலிக்கிறது பாலுவின் குரல். பல்லவியிலிருந்து மீண்டும் ஹேய் என்ற அழைப்புக்கு நழுவும் ஒவ்வொரு முறையும் மேலும் கிற்ங்கடிக்கிறது அவரது ரகசிய ஒலிக்குறிப்பு மிக்க குரல்.

முதல் பல்லவியில் வயலின்கள் காதல் தீயை வளர்க்கின்றன….குழல் மேலும் காற்று ஊதி அந்தத் தீயை ஜொலிக்க வைக்கிறது….கிடார் அதில் கன்னங்களை மின்ன வைக்கிறது.  ‘கீழ் வானிலே இளஞ்சூரியன் தேரோட்டமே காண…’ ஆஹா, சரணத்தின் முதல் வரியில் தான் எத்தனை கொண்டாட்ட உணர்வு! ‘விடிகாலையின் பூந்தென்றலில் நாம் காண்பது பேரின்பமேஎன்பதை இழைத்தெடுக்கிறார் பாலு. ‘எங்கும் பொங்கும் வண்ணம் கண்டேன்…’ என்கிற வரியின் ஒவ்வொரு சொல்லும் எத்தனை துள்ளாட்டமாக அந்தத் தாள லயத்தில் வந்து மிதக்கின்றன….’புதுமையே இயற்கையை ரசிக்காதோ …’ என்கிற அடியில் தான் எத்தனை எத்தனை ஓட்டமும் நடையாய்க் காதலைச் சொல்கிறார்ரசிக்காதோ என்ற ஒற்றைச் சொல்லில் மட்டுமே த்தனை ரசங்களைப் பொழிந்து விடுகிறது அவரது குரல்!

இரத்தினச் சுருக்கமான இசையின் வழியாக இரண்டாம் சரணம் சட்டென்று தொடங்கிவிடுகிறது!  ‘நீ பார்த்ததும் நான் வந்ததும்…’ என்று இழைத்து, ‘தேனானதே வாழ்வில்என்று கொண்டு சேர்க்கும் இடத்தில் காதலின் கொடி பறக்கிறது. ‘இளம் ஜோடியின் விழி ஜாடையில் பேராசைகள் ஒரு கோடியேஎன்பதில் பாடலின் கிண்ணத்தில் காதல் ரசம் ததும்பி வழிகிறது. ‘அங்கம் மின்னும் தங்கம் கண்டேன்…’ என்ற வரியும், ‘இளமையே இயற்கையை ரசிக்காதோஎன்கிற வரியும் முதல் சரணத்தைப் போலவே உருக்கி வார்க்கின்றன காதல் ரசத்தைமீண்டும்ஹேய் ஹேய்ஓராயிரம்‘.  பாடல் நிறைவடைந்த பின்னும் மிதந்து கொண்டிருக்கிறது காதல், ரசிகர்களைச் சுற்றிச் சுழன்றுஓராயிரம் என்ன..எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் சுகமே என்று எழுதுகிறார் யூ டியூபில் கேட்டுக் கொண்டே இருக்கும் ரசிகர் ஒருவர்

இசை மனிதர்களை புதிய உரையாடல்களில் ஆழ்த்துகிறது. உள்ளூர நடக்கின்றன அந்தப் பேச்சு வார்த்தைகள். கண்களில் நீராகத் துளிர்க்கிறது ரசிகர்களின் பரவசம். சொற்களில் கரை புரண்டோடுகிறது சில நேரம். உன்னத உணர்வுகளைக் கிளர்த்தும் இசை தானும் உன்னதத்தை அடைகிறது. பாடு பொருள் பேசு பொருளாகிறது. சம நோக்கில் எல்லோரையும் நோக்கவைக்கும் இசை தான் உண்மையில் அருளாகிறது

(இசைத்தட்டு சுழலும் ……)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “இசை வாழ்க்கை 83: பாடல் உண்டா கேட்டுச் சொல்லு – எஸ் வி வேணுகோபாலன்”
  1. அருமையான பதிவு. வாசிக்க ஒரு அதிர்ஷ்டம் அடித்தது. சிறந்த படைப்பை வழங்கிய எஸ் வி வி அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். மிக்க மகிழ்ச்சி😊🎅🎄

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *