என் கனவு இந்தியா கவிதை – செ.சினேகா

என் கனவு இந்தியா கவிதை – செ.சினேகா




“சுதந்திரமாக சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க வேண்டும்…

வேலை தேடும் இளைஞர்களுக்கு
வேலை விண்மீனாகக் கண் சிமிட்டிட வேண்டும்…

காசு வாங்காத
கல்விக் கூடங்கள் வேண்டும்…

பொதுச் சொத்தை
நம் சொத்தாகப் பாதுகாக்க வேண்டும்…

சாதி சண்டை இல்லாமல்
சரித்திரம் படைக்க வேண்டும்…

குப்பை இல்லா வீதிகள்
முதியோர்
அமர்ந்து பயணிக்கும் பேருந்துகள்

ஏழைபணக்காரர்
எல்லோர்க்கும் ஒரே பள்ளி

வீதியில் தவிக்கா விவசாயிகள்
இல்லங்கள் ஏற்கும் முதியோர்கள்

முற்றுப்புள்ளியில்லா முயற்சிகள்

எல்லா உயிர்களும் என் உயிர் போல….

இது தான் என் கனவு இந்தியா….”

நிஜமாகுமா
நீங்களே சொல்லுங்கள்….

செ.சினேகா
திருப்பத்தூர் மாவட்டம்,
புதுப்பட்டு கிராமம்.
டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் மகளிர் கல்லூரி,
சென்னை. இளங்கலை தமிழ்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Poovarasan

    கனவு தேசம் விழிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *