Subscribe

Thamizhbooks ad

*பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் மர்ம முடிச்சுகள்* – சுமந்த் சென் மற்றும் விக்னேஷ் ராதாகிருஷ்ணன் | தமிழில் இரா.இரமணன்



பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தால் ஏழை,நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவது கண்டனத்திற்குரியது. அதோடு அவைகளின் விலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

 *குறைந்திருக்கிறது ஆனால் குறையவில்லை!* 

சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்து விட்டது;ஆனால் நம் அரசாங்கம் குறைக்காமல் ஏற்றுகிறது என்று சொல்பவர்கள் உண்மையில் அடிப்படை விலை நம் நாட்டிலும் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவார்கள். மே 2014 அன்று ரூ 47.12 ஆக இருந்த அடிப்படை விலை பிப்ரவரி 2021 அன்று ரூ29.34 ஆகக் குறைத்துள்ளது. அப்படியானால்  பெட்ரோல் டீசல் விலை ஏன் கூடுதலாக உள்ளது? இந்த எரிபொருட்களின் விலையில் அடிப்படை விலை, மத்திய மாநில அரசுகளின் வரிகள் மற்றும் முகவர்களின் கமிஷன் ஆகியவை அடங்கியுள்ளன. இவை எப்படி மாற்றம் பெற்றுள்ளன என்பதை டெல்லி நகர பெட்ரோல் விலையை எடுத்துக்கொண்டு பார்க்கலாம்.

மே 2014 பிப்ரவரி 2021 மொத்த விலையில் சதவீதம்

2014    2021

*அடிப்படை விலை* *47.12* *29.34* *66*      *34*
மத்திய வரி 10.39 32.98 14          38
மாநில வரி  11.9 19.92 17           23
முகவர் கமிஷன்  2 3.69 3                4
மொத்த விலை   71.41 86.3

அடிப்படை விலை 2014 ஆம் ஆண்டில் 66%இலிருந்து 2021ஆம் ஆண்டில்  34%ஆக குறைந்துள்ளது. அதே காலத்தில் வரிகள் 34%இலிருந்து 66%ஆக அதிகரித்துள்ளது. மற்ற நகரங்களில் இதுவே நிலைமை.



*ஏறியும் ஏறவில்லை!* 

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் *விவசாயக் கட்டுமானம் மற்றும் வளர்ச்சி துணை வரி* (*agricultural infrastructrue and development cess – AIDS*) என்கிற புது வரி இந்த பட்ஜெட்டில் விதிக்கப்பட்டபோதும் மேற்கண்ட அட்டவணையில் காட்டப்பட்டுள்ள மத்திய வரியான 32.98% என்பது மாறவில்லை. இதை எப்படி செய்துள்ளார்கள்,அதன் முக்கியத்துவம் என்னவென்று பார்க்கலாம்.(பெட்ரோலுக்கான அட்டவணை.)

ஜூன் 2020 பிப்ரவரி 2021
அடிப்படைகலால்வரி  2.98 1.4
கூடுதல் கலால் வரி  12 11
*விவசாய செஸ் AIDS* *2.5*
சாலை கட்டுமான வரி  18 18
மொத்தம் 32.98 32.9

   கலால் வரியை குறைத்து புதிய விவசாய துணைவரியை(CESS) விதித்து மொத்த வரி அப்படியே இருப்பது போலக் காட்டியிருக்கிறார்கள். 



*துணை வரிகள் எனும் தந்திரம்* 

அதனாலென்ன என்கிறீர்களா? முதல் சூட்சுமம் துணைவரிகள் மாநிலத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டாம் என்பது. இரண்டாவது, துணை வரிகள் எந்த நோக்கத்திற்காக விதிக்கப்பட்டதோ அதற்காக மட்டும்தான் பயன்படுத்தப்பட வேண்டும். அதையாவது செய்வார்களா என்றால் மத்திய அரசின் முதன்மைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கை நேர் மாறாக உள்ளது. 

வசூலிக்கப்பட்ட  துணை வரி(கோடிகளில்)  செலவழிக்காமல் தக்க வைத்துக் கொண்டது 
2019 மொத்த துணை வரி  274592 40%
2019 ஜிஎஸ்டி துணை வரி  95081 43%
2019 சாலை கட்டுமான துணைவரி   110847 9%
2010-2019 கச்சா எண்ணெய் துணை வரி  124399 100%

  ஆக இந்த விவசாய துணை வரியையும் மத்திய அரசாங்கம் அந்த நோக்கத்திற்காக செலவழிக்குமா என்பது கேள்விக்குறியே.

சுமந்த் சென் மற்றும் விக்னேஷ் ராதாகிருஷ்ணன் (தி இந்து ஆங்கில நாளிதழ் 15.02.2021 கட்டுரையின் தமிழாக்கம்)
நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ்
https://www.thehindu.com/data/as-petrol-prices-cross-90-per-litre-new-cess-could-deepen-centres-coffers/article33841260.ece



Latest

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது வீடு என்பது எப்போதும் நிரந்தர குடியிருப்பும்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு          (3) தாளமிசைக்கும்  கால்கள் தலையசைக்கும் பயிர் களை பறிப்பவள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here