** சார்லஸ் டார்வின் வாழ்க்கை வரலாற்றை மிக எளிமையாக அழகாக எழுதியுள்ளார் நூலாசிரியர்
**சார்லஸ் ராபர்ட் டார்வின் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர்.
**இவர்முன்வைத்தஉயிரினங்களின்
படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை.
**இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
**இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல்.
**இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச்சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன.
**மனித இனம் குரங்குஇனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையதாக உள்ளது.
**உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, ‘தக்கன பிழைக்கும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,
**அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.
**டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும்.
 **மண்ணின்வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார்.
** அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும்.
*நன்றிகளுடன்*
‘புத்தக ஆர்வலன்’ வ.பெரியசாமி,
பட்டதாரி ஆசிரியர் கணிதம்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
பக்கநாடு ஆடையூர், Periasamy Varudharaj
ஆடையூர் அஞ்சல்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம்-636501
புத்தகத் தலைப்பு: சார்லஸ் டார்வின்
ஆசிரியர்: முனைவர்.என்.மாதவன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம் 
விலை: ரூ.50
இப்புத்தகத்தை வாங்க: சார்லஸ் டார்வின்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *