ந க துறைவன் கவிதைகள் (Na Ga Thuraivan Kavithaikal)

ந.க.துறைவன் கவிதைகள்

1.
வாசல் கதவில் விநாயகர்
செதுக்கப்பட்டிருக்கிறது
வெள்ளிதோறும் பொட்டு வைத்து
அழகாக மிளிர்கிறது
உறவினர்கள் வந்தால்
அவர்கள் பார்வையில் படுகிறது
உள்பக்கம் திறந்தால்
விநாயகர் மறைகிறார்
வெளிப்பக்கம் திறந்தால்
விநாயகர்  தெரிகிறார்
தெரிவதும் மறைவதும்
மனம் என்று கற்குமோ?

2.

வாசலில் கட்டி வைத்திருக்கிறார்கள்
கண்திருஷ்டி பொம்மை
தெருக்காரர்கள் திருஷ்டியா?
உறவினர்கள் திருஷ்டியா?
பகைவர்கள் திருஷ்டியா?
யார் கண்திருஷ்டி அது?
திருஷ்டி கழிய வழியுண்டோ மானிடரே…

3.

சத்தமிட்டுக் கொண்டிருந்தது கதவு
என்ன கோளாறு பார்த்தால்
எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை
எண்ணெய் விட்டுப் பார்த்தேன்
உள்பக்கம் வெளிப்பக்கம்
திறந்து திறந்து பார்த்தேன்
சத்தம் மட்டும் நிற்கவில்லை
யார் வந்தால் நிற்குமோ சத்தம்?.

4.

வீடு பூட்டிருப்பது பார்த்துவிட்டு
எனக்கு வந்த இலக்கிய மாத இதழை
கேட்டிற்குள்ளே வீசிய எறிந்துவிட்டு
போயிருக்கிறார் தபால்காரர்
ஊர்திரும்பிய பிறகு இதழ்பிரித்து
பக்கங்கள் புரட்டினேன்
ஒரு தாள் கீழே விழுந்தது
சந்தா முடிந்துவிட்டது
வாழ்நாள் சந்தா முடிவதுண்டோ?

5.

எதற்காகவோ குழப்பமாக இருந்தவர்
தெளிவடையவில்லை
குழப்பத்திற்கு மேல் குழப்பம்
மனதைச் சூழ்ந்திருந்தது
யாரிடமும் ஆலோசனை கேட்கவில்லை
அவர்
குழப்பம் எதற்காக ஏற்பட்டதென்று
கொஞ்சம் புரிந்திருந்தது
அதைச் சரி செய்ய இயலுமென்று
நம்பினார்
யாரிடமேனும் ஆலோசனை கேட்டால்
மீண்டும் குழப்பி விடுவார்கள் என்று
உறுதியாக நம்பினார்
குழப்பத்திலிருந்தே அவருக்குத்
தெளிவும் கிடைத்தது
மீண்டும் குழம்புமோ?


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *