குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu) – நூலில் இருந்து
ரோஜா ரோஜா தான் என்பது போல ஹைக்கூ ஹைக்கூ தான் .
அதை வேறு வாசனை வரும் என்று நினைத்து முகரக் கூடாது என்பது உண்மைதான் .
வயிற்றுப் பசிக்கு தனக்கு இல்லாவிட்டாலும் குழந்தைக்கு ஊட்டும் மரபுள்ள வீட்டில் கூட
*இன்று வேண்டாம்*
நாளை வா நிலா
ஊட்டுவதற்கு
சோறு இல்லை!
என்று எழுதி இருப்பது ஏழ்மையின் எலும்புகளை எண்ணியது போலாகிறது.
எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே
உணவில்லை ….
🌹🌹🌹🌹🌹🌹🌹
தோட்டத்தையும்
பின் ஒரு
பெண்ணையும்
சேர்த்து
ஞாபகப்படுத்துகிறது
நூலக புத்தகத்தில்
*உலர்ந்த செம்பருத்தி…*
அய்யயோ இக்கவிதையை வாசித்தவுடன்…
சிறுவயது
*டைரி மில்க் பேப்பரும்*
*சருகான ரோஜா பூவும்*
சிரித்துக் கொண்டது …
கவச குண்டலமும் கலை உத்திகளும் என்ற
புது உரையில் :
_குழந்தை அழகாய் இருக்கிறது. ஆனால் அதை கொஞ்சிக் கொஞ்சியே கொன்றுவிடுவார்கள் போலிருக்கிறது_ என்ற கவிஞர் சுரதாவின் பேச்சினை நினைவுபடுத்தி, ஹைக்கூவின் நிலைப்பாட்டை ஜீரணமாக்கி இருக்கிறார் *நிர்மலா சுரேஷ்* அவர்கள்.

ஹைக்கூவினை அப்படி ஆக்கிவிடக்கூடாதென நெறி கொண்டு கொஞ்சுவதோடு நிறுத்தாமல் காது, மூக்கு, நாக்கு என்று எல்லா இடங்களிலும் துளையிட்டு நகை போட்டால் தாங்குமா?
பச்சைக் குழந்தைக்கு பச்சை குத்துவதா?
விதைக்கே ரசாயன உரமா?
என்று இலக்கணத்தை இலகுவாக சொல்லி உள்ளார்.
*சாமியின் முகத்தில்*
*சந்தன காப்பு*
பல்லுக்கு
தூக்கிகளிடம்
*சாராயநெடி*
என்ற ஹைக்கூவில் நல்ல புரிதல் கிடைக்கும்.
பக்தி *மனதிற்கு* என்றாலும்
*பாரம்* உடலுக்குதானே !?!?!
என சாராயநெடி சொல்கிறது போலும்.
பிம்பங்கள் அற்ற
தனிமையில்
ஒன்றிலொன்று
முகம் பார்த்தன
_சலூன் கண்ணாடிகள்_
என்ற வரிகளில்…..
*எதிரொளிப்பு* விதிகளை *கவிதெளித்து* சற்று கண்மூடி யோசிக்க வைத்துள்ளார்.
இயற்பியல் ஆய்வுக்கூடம்
மாணவர்கள்
விட்டுச் சென்றது
ஸ்பெக்ட்ரோமீட்டருக்குள்
*வானவில்*
என்ற பதத்தில்……
மழைக்கால வானவில்லை நான் பார்த்ததை விட
கீற்றணியில்
வெள்ளொளி பாய்ந்து VIBGYOR உருவாகுவதை கண்டது தான் நினைவு வருகிறது.
ஜன்னல் கம்பியை வளைத்தது திருடனல்ல…
*நிழல்*
📌📌📌📌📌
வயதான மலைக்கு
தாடி
நரைத்திருக்கிறது
அருவி
நதிக்கரை நாணலுக்கு
கொலுசுகள் போட்டன
*நுரைகள்*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து
பறிக்கிறான்
பூனை வளர்க்கும்
சுதந்திரம்!
இந்த வரிகளில் பல அர்த்தங்கள் உள்ளதை
புறாவும் பூனையும் உணர்ந்திருக்கும்.
கிராப் வெட்டிய
பனை மரங்கள்
ஹெல்மெட்
மாட்டுகின்றன
*கள்ளுப் பானைகள்*…
குழந்தைகளின் வீடு நம்மை குழந்தைகளாக தவழச் செய்யும்.
இளைப்பாற வாசிக்க வேண்டிய நூல்.
நூலின் விவரம்:
நூல் : குழந்தைகள் நிறைந்த வீடு (Kuzhanthaigal Niraintha Veedu)
ஆசிரியர்: நா.முத்துக்குமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ 100
பக்கம்: 78
நூல் அறிமுகம் எழுதியவர்:
யாழ்.மாரி
கும்பகோணம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

