அ”னா ஆ”வன்னா – நூல் அறிமுகம்
*நா.முத்துக்குமார் அவர்கள் கவிதைகளோடு வாழ்ந்தவர் இன்று கவிதையாய் வாழ்கிறார்.*
எழுதுகோலின் கூர்முனை காகிதத்தில் தடம்பதிக்கும் போது, எழுதிப் பதிந்த எழுத்துக்கள் எல்லாம் பிறர் மனதில் எழுத வேண்டுமென்று நினைத்திருப்பார் போலும்….
எல்லா கவிதைகளிலும் வாழ்ந்திருக்கிறார் …
அப்பாவின் புத்தகம் என்று கவிஞர் ஆதவன் முத்துக்குமார் துவங்கிய விதத்திலிருந்து….
103ஆம் பக்கம் வரை அ”னா ஆ”வன்னா (Aanaa Aavannaa) அருமை …
இருவருக்கு சமர்பணம் செய்ததில்,
நா. முத்துக்குமார் அவர்களின் வாழ்வதிகாரத்தில் வசப்பட்டவர்களாக இருந்தேயாக வேண்டும்..
வளர்தலும் வளர்தல் நிமித்தமும்
மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் (ஒரிஜினல்)
பாட்டி சொல்லாத குறிப்புகள்,
ஆகியவை தமிழில் புதிய எழுத்துகளை உணர்த்தியது போல பல முறை படிக்கத் தோன்றியது….
குறிப்பாக, ஐந்தாம் வகுப்பு “அ”பிரிவு…
பலமுறை படித்து.
ஆமாம் ! ஆமாம் !! என்று எனக்குள் ஆமாம் போட்ட கவிதை…
படித்து முடித்ததும் என்னவாக போறீங்க ? என்று எப்போதும் மாணவர்களை கேட்பதில்லை என்று அனுபவ ஆசிரியர் சொல்வதாய் நிறைவு செய்த கவிதை அது….
ஏனெனில் மருத்துவராக வேண்டுமென பள்ளிப் பருவத்தில் நான் நினைத்ததுண்டு. காலத்தின் கைப்பிடித்து ஒரே ஓட்டமாய் ஒடி வந்து ஆசிரியராய் புத்தக விமர்சனம் பதிவிடுகிறேன்.தங்கள் கவிதை நேர்த்தியாக இதயத்தை வருடியது.
*புத்த(௧)யா* என்ற தலைப்பில்,
_ஒரு புத்தகத்தை திறக்கிற போது ஒரு உலகம் திறந்து கொள்கிறது !!_
ஒரு புத்தகம் எரிகிற போது ஒரு அனுபவம் எரிகிறது…
எது எடுத்தாலும் பத்து ரூபாய் கடை..
எல்லா புத்தகங்களையும் நின்றுக்கொண்டே படிக்கும் வறுமை ….
என்ற வரிகளை வாசிக்கும் போது வறுமையின் பக்கங்கள் காற்றில் திரும்பி, அது கற்றுத் தந்த பாடங்கள் நினைவோரம் இருக்கும்.
தலை குனிந்து படி! தலை நிமிர்ந்து வாழலாம்!! என்ற வார்த்தைகளுக்கு வழிமொழிந்து, வாசிப்போர் ஒவ்வொருர் இல்லத்திலும் புத்தக அலமாரியும் பொக்கிஷமான புத்தகங்களும் இடம் பிடிப்பதற்கு வாசிப்பு மட்டுமே காரணம்.
*பெரிய பெரிய புத்தகம் எழுதுகிறவர்கள் புண்ணியம் செய்கிறவர்கள்….*
ஒன்றுடன் ஒன்று
ஒட்டாமல் உருட்டிய
சப்பாத்திகளை
எடுத்து வைக்க
அவை தான்
*வசதியாக*
*இருக்கின்றன…!*
என்ற வரிகள் நகைப்பாக இருந்தாலும் புத்தகத்தின் அருமை அவற்றை வரிக் கண்ணோட்டம் செய்யும் பொழுது தானாக தெரிந்து விடும்.
புத்தகங்களை சரியாக விமர்சிப்பது கரையான்கள் மட்டுமே….
சில புத்தகங்களை
கரைத்துக்
குடிக்கின்றன…
சில புத்தகங்களை
கடித்துக்
குதறுகின்றன..
*புத்தக வரிகளில் கோடு போட்டு படிக்கிறவர்கள் எங்கேயோ இருக்கும் எழுத்தாளனுக்கு இங்கிருந்தே கைகுலுக்குகிறார்கள்…*
ஆமாம் ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் ஆக சிறந்த பெருமை என்பது தமது புத்தக வரிகளில் எவருக்கோ பயன்படும் வரிகள் உள்ளன என்பதுதான்…
அவற்றை செய்வதில் கவிஞர் முத்துக்குமார் அவர்களின் புத்தகம் *என் அலமாரியில் நிறைய இடத்தை பிடித்துள்ளது.*
குற்ற உணர்ச்சியின் படிக்கட்டில் கால் வைக்காமல் புத்தகம் திருடுவது பெரிய கலை….
மாற்றான் அலமாரி புத்தகத்திற்கு மணம் அதிகம்..
உரத்த குரலில் உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்
*நான் படித்த புத்தகங்களில் பாதி அடித்த புத்தகங்கள்…*
என “தான் அடித்த புத்தகத்தை” வாசிப்பாளர்களுக்கு வெளிச்சம் போட்டு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள்….
அ’ன்னா ஆவன்னா என வாசிப்பை தொடங்கி கற்றலில் நல்ல தேர்ச்சி பெற வைத்திருக்கிறது இப்புத்தகம். அனைவருக்கும் வாசித்து வளம்பெற வேண்டுமென நினைக்கும்….
நூலின் தகவல்கள் :
நூல் : அ”னா ஆ”வன்னா (Aanaa Aavannaa)
ஆசிரியர் : நா.முத்துக்குமார்
விலை – ரூ.114
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
நூல் அறிமுகம் எழுதியவர் :
யாழ்.மாரியப்பன்
கும்பகோணம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.