Subscribe

Thamizhbooks ad

நாங்கள் வாயாடிகளே : நூல் அறிமுகம் -இரா.சண்முகசாமி 



‘நாங்கள் வாயாடிகளே’

ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில்  மார்ச் 2023ல் ஆசிரியர் சாந்த சீலா அவர்கள் எழுதி வெளியான சிறப்பான புத்தகம் தான் ‘நாங்கள் வாயாடிகளே’.

04.04.2023 பாரதி புத்தகாலயம் ஓங்கில் கூட்ட புத்தக வெளியீட்டில் அவரை சந்தித்தபோது இப்புத்தகத்தை அளித்தார்கள். இந்நூலை ஏற்கனவே அவர் முகநூலில் பதிவிட்ட போதே “வாயாடிகளை வாசித்து அடங்கி விடுகிறேன்” என்றுதான் பதிவிட்டிருந்தேன். தற்போது அக்கட்டுரை உட்பட ஏழு கட்டுரைகள் வாசித்துவிட்டேன். இன்னும் 17 கட்டுரைகள் வாசிக்க வேண்டும். வாசித்த வரை அனைத்து கட்டுரைகளும் சமூகத்தில் நிறைய பீடித்துள்ள கட்டுகளை உடைத்துத் தள்ளியுள்ளது. அதுவும் ‘வாயாடிகளே’ கட்டுரையில் பெண்கள் ஏன் அதிகம் பேசினர் அதற்கான வரலாறு என்ன என்பனவற்றிற்கு மிகச்சிறப்பாக அறிவியல் விளக்கம் கொடுத்திருப்பார்கள். வேட்டைச் சமூகத்தில் தான் மொழி தோன்றியது. அப்போது முதல் குழந்தைக்கு பேசக் கற்றுகொடுத்தவள் தாய். விலங்குகள் வாழும் உலகில் பேசுவதற்கான மொழி ஏன் தேவைப்பட்டது என்பது இப்போது நமக்கு புரிகிறது.

பொதுப்புத்தியாய் கட்டமைக்கும் பலவற்றிற்கு உடைப்பு வேலை கொடுத்திருப்பார். வாயாடிகளை வாசித்தால், வாயாடாமல் விட்டிருந்தால் ஒருவேளை நாமெல்லாம் இந்தக் காலத்திலும் பேசமுடியாமல் தான் இருந்திருப்போமோ என்கிற சந்தேகம் இயல்பாக எழுந்தது.

அதேபோல் பெண்களின் ஆடையில் பாக்கெட் வைக்காதது, உணவில் சமத்துவம், ‘பொட்டை’ என்கிற வார்த்தையின் பின் உள்ள உளவியல் சிக்கல் குறித்த கட்டுரை, சிறுநீர் கழிக்காததன் விளைவு, பொண்ணு கறுப்பா இருந்தா எவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கும் இந்த சமூகத்தில் பொதுப்புத்தியாய், கல்வியில் சமமான வகுப்பறை இருக்கா என்கிற கேள்வி’ இப்படி படித்த வரைக்குமான கட்டுரைகளே நிறைய உள்ளத்தைக் கிளறுகிறது. தோழரின் ஆசிரிய வாழ்க்கை அவருக்கு நிறைய கிடைத்த அனுபவமாக இந்நூலை நான் கருதுகிறேன். எழுத்து நடையும் மிக இயல்பாக இருக்கு. அவர் தொடர்ந்து மென்மேலும் கல்வி குறித்த சிக்கல்களை எழுதவேண்டும் என்று அவரை அன்புடன் வாழ்த்துகிறேன். வெகுசிறப்பு!
மனமார்ந்த நல்வாழ்த்துகள் தோழர்!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

தோழமையுடன்

இரா.சண்முகசாமி

புதுச்சேரி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here