எங்கிருந்தோ…வந்த பறவை…
என் மீதுள்ள
நம்பிக்கையால்…
என் இல்லத்தில் கூடு அமைக்க…
வராத விருந்தினர்…
வருகை புரிந்தது போல்
ஒவ்வொரு நாளும் அதன்
நலம் விசாரித்தே…
அன்பாய்…உறவாட…
சுற்றங்களின் எண்ணிக்கை
அதிகரித்தது போல்…
முட்டையிட்டு…அடைகாக்க
காத்தலின் பயனாய்…
குஞ்சுகளும் ஒவ்வொன்றாய்
புது உலகைக் காண…வெளி வர
ஒவ்வொன்றிற்கும் பெயர்
வைத்தே…அன்போடு உறவாடி
தாய்ப்பறவை ஊட்டும் அழகை…
இமைக்காமல் ரசித்தே…
பொழுதைக் கடத்திட…
வளர்ந்த பறவைகளும்…
சிறகு விரித்த பயனாய்…தன்
வாழ்க்கை தேடிச்சென்றே…
வலசை போக…
கூடும்…நானுமாய்…
காத்திருக்கிறோம்…என்
இல்லம் நாடி வராவிடினும்…
என் உள்ளம் நாடும் என்றே…
–சக்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

