காலம் தின்றுவிட்டு
மிச்சம் வைத்ததை
கடமைகள் தின்றுவிட
தினமும் என்னைத் தேடி
அலைந்து திரிகிறேன்
யாரோ என் தோளைத் தொட்டு
“ஹேப்பி நியூ இயர்… ”
என்கிறார்கள்…
தேடுதலை நிறுத்தி விட்டு
நானும் பரஸ்பரம் கை கொடுத்து
“விஷ் யூ த ஸேம்… ” என்றேன்
இரவு கழிந்தது விடிந்தது
மீண்டும் தொலைதலும் தேடலும்
தொடர்ந்தது
ஒரு புத்தகத்தின் நடுப்பக்கத்தில்
என்னை நான் ஒளித்து வைத்தது மறந்து போனது
என்னை நான் கண்டெடுத்த
பக்கங்களில் நீங்களும் இருக்கிறீர்கள்
ஒரு புத்தனும் இருக்கிறான்…
– ஜெயஸ்ரீ பாலாஜி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.