
சுத்தம் சோறு போடும் என்று சொல்ல கேட்டுக் கொண்டே இருக்கிறோம். வயது மூப்பு வந்த நபர் கூட சுத்தம் இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம். இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு சுத்தத்தை கற்பித்தல் என்பது ஒரு கலை. மழலை என்றாலே கலை தானே.
டின் டின் வாத்து செய்யும் அட்டகாசத்தை விவரித்து அதன் ஊடே எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என படக்காட்சியோடு காட்சிப்படுத்திய விதம் அருமை.
டின் டின் வாத்து அசுத்தமான வாழ்வியலால், டின் டின் அப்பாவிற்கு என்ன நேர்ந்தது?
சுத்தமில்லா டின் டின் வாத்து எப்படி சுத்தமான சமத்தான டின் டின் வாத்தாக மாறியது.
யாரு டின் டின் வாத்தை தூக்கிக் கொண்டு போனார்கள்?
எறும்பு எப்படி, யாரை, எங்கு, ஏன் கொண்டு போனது?
எறும்புகள் என்ன சொல்லி பாடின? எறும்பின் வீட்டில் எத்தனை அறைகள் இருந்தன?
எல்லா கேள்விகளுக்கும் ஆசிரியர் உதயசங்கர் அழகான பதில் அளித்து உள்ளார்.பிள்ளைகளே எல்லோரும் படித்து டின் டின் வாத்து கற்றுக் கொண்டதை கடைபிடிக்க வேண்டும். எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஓவியங்கள் அருமை. ஓவியர் உ. நவீனா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
நன்றி
நூலின் தகவல்கள்
புத்தகத்தின் பெயர்: “நலம் தரும் சுத்தம்” (சுட்டிக் குழந்தைகளுக்கு குட்டிக் கதைகள்)
எழுத்தாளர் : திரு. உதயசங்கர்
ஓவியம் : திரு. உ. நவீனா
பதிப்பகம் : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 44 2433 2924 https://thamizhbooks.com/product/nalam-tharum-sutham/
பக்கங்கள் : 12
விலை : ரூ. 30/-
எழுதியவர்

திருமதி சாந்தி சரவணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

