இந்தியக் குடியரசு இமாலயக் கட்டமைப்பு ! மேடு பள்ளம் நிறவல் மேன்மை குறிக்கோள் நிறம் அகற்றல் நியாயம் உணர்த்தல் அறிவுப் பெருக்கம் அகிலம் குறிக்கோள்! மேன்மக்கள் மெத்தப் படித்தோர் மாதா தேசம் மனமெலாம் வாசம்! தேச பந்துக்களின் தெய்வீக எண்ணம்! தம்மைப் போலே தம்மின மக்கள் தாய்நாடுயர தருவார் தியாகம்! நம்பினர் நாசமாய்ப் போன நம்மை! கொள்ளையடிப்பதற்கு முன் பணம் கொடுக்க திருடர் போலே... திரை மறைந்து வரும் வேட்பாள! அந்தக் கட்சிக்காரன் வந்து விட்டான்... இந்தக் கட்சிக்காரன் என்ன ஆனான்? சிகப்பு விளக்கேற்றி வைத்து விட்டு.... சீ... சீ.... பல்லிளிக்கும் பாவிகள்! விடியாத ராத்திரி வீதியெங்கும் விலை மாதர்! கொஞ்சிக் கொடுப்பவனும் குழைந்துப் பெறுபவனும் அஞ்சிடாமல் செய்யும் அநியாயக் காமம்! வந்தவன் கொடுப்பதுதான் வாடிக்கை; அது இந்த இரவிலும்....! இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம். புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

நெஞ்சாங்குழியில் கவிதை – கவிஞர் ம.செல்லமுத்து


என் என்றென்றும்
அவள் நெஞ்சாங்குழி நீங்காமல் ..

அழியாத சுவடுகளில்
தெரியாமல் அழிந்து போன என்
முதல் காதல் தான் ..!!

யாரோ அவள்
யாரோ நான்
அல்ல ?
காலத்தால்
அறிந்தும்,புரிந்தும்,பிரிந்து,
போன காதல் நெஞ்சாங்குழி ..!!

சிந்தித்த வயதில் காதலும் சிந்தை ஆனது!!
பல விந்தைகளாக பல நாட்கள் தொடரில்,,தொடராமல்

வாழ்க்கையில் பல மாறுதல்கள் காதலில் கயவன் ஆனதால்

அன்று
இருளிலும் கண் விழித்தது இன்று பகலில் கண் விழிக்க முடியாமல் ..!!ஏமாற்றப்படுவேன் என்று தெரியாமல்!!
பொய்யும் உண்மை என இன்று ஊமை ஆகினேன்!!

சாதிப்பதை அழித்து
சாக்கடையும் சாதி பார்த்தது
காதல் என்ற மாயையைக் காட்டி..!!
குச்சி உடம்பைக் கொண்டு உருவமில்லாமல் ஆக்கிவிட்டாள்
பாதகி பாதையை தேட..!!

உடும்பு உடம்பு கிறுக்கு பிடித்தது விபத்தில் அடையாளம் அறியாமல்
நல்லவர்களை சோதிப்பது தானே ஆண்டவன் விளையாட்டு ….!!
பலரை காலத்திலும் காதலிலும் கலங்கடித்து ..!! ம.செல்லாஹ்

அன்று
லட்சியமும் அலட்சியமானது!!
இன்று வாழ்க்கையே முடிவற்ற அரங்கமானது!!
அவசர தேடலில் காதலும் அன்று தேடப்பட்டது!!
சேதப்பட்ட பின்பு தான் தேதி பட்டது!!
மீண்டும் அவளை தேடாதே என் நெஞ்சாங்குழி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *