நெற்கள் காய்க்காத பூச்செடி
****************************************
தேநீர் கோப்பை போல்
கவிழ்ந்திருக்கின்றன
மழை நீர் வழியும்
மலர் இதழ்கள்
….
எந்தப் பூச்செடியிலும்
நெற்கள் காய்ப்பதில்லை
பூக்கள் தான் பூக்கின்றன
அவை அழகானவையாக இருக்கின்றன
…..
சுற்றுப்புற கார்பன் மாசு
நெகிழிப் பைகளால்
கடல் வாழ் உயிரினங்கள்
அழிவு
மாமா சாவில்
சாங்கிய சடங்குகளின் புனிதம்
எல்லா நதியும்
சாக்கடையிலேயே கலக்கிறது
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

