கவிதை: நேசம் அயராது Nesam Ayarathu Kavithai

கவிதை: நேசம் அயராது – சரவிபி ரோசிசந்திரா

 

 

 

இன்றைக்கும் என்றைக்கும் நம் அன்பில் பிரிவேது
இல்லறத்திற்கு இணையான
உலகத்தில் உறவேது

என்னுயிர் கலந்த நாயகனே
எனக்குள் வாழும் மன்னவனே
ஏழேழு உலகை ஆள்பவனே
ஏழைக்கு இரங்கும் தென்னவனே

நீ இருக்கும் இடந்தேடி
நினைவு வரும் மறவாது
நீங்காத உன் அன்பில்
நிலைத்திடும் நேசம் அயராது

நீயின்றி நானில்லை
நாம் சொல்லத் தேவையில்லை
நீயே நானென்று
இறைவன் சூடினான் பூமாலை

கண் மூடிப் பார்த்தேன்
நீ செய்த தியாகம்
கண் கலங்கி நின்றேன்
நான் உந்தன் யாகம்

நம் வாழ்வில் என்றென்றும்
புரிதல் கலையாத மேகம்
நாள்தோறும் மின்னும்
உன் பொன்னுடல் தேகம்

அப்பொழுதும் இப்பொழுதும்
நீ எந்தன் பக்கத்தில்
எப்பொழுதும் என் நெஞ்சம்
உயர்ந்த உந்தன் இதயத்தில்

சரவிபி ரோசிசந்திரா

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *