Nilaiyillatha kalathin varai padam Kavithai By Vasanthadheepan. நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை - வசந்ததீபன்

நிலையில்லாத காலத்தின் வரைபடம் கவிதை – வசந்ததீபன்

கண்கள் தோட்டாக்களை
உமிழத் தயாராகிறது
இதயம் விசையை முடுக்க
தருணம் பார்க்கிறது
குறிக்குத் தப்ப
கனவுகள் முயல்கின்றன
நிலங்களைத் தின்கின்றன தொழிற்சாலைகள்
கிராமங்கள் கரைகின்றன
ஒளிய இடந்தேடுகின்றன பறவைகளும், மிருகங்களும்
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
புனைவாளனின் மூளை வெடிக்கிறது
புழுக்கள் பேசிக்கொண்டு வெளியேறுகின்றன
எவள் எவளோடவோ திரிந்தவன்
அவளோட சேர வந்திருக்கிறான்
அவனோடு இணைய
அவள் தயாரில்லை
கடந்து தான் செல்ல போகிறோம்
கசிந்து உருகித் தேங்காதே
காட்டாற்று வெள்ளமாய் பிரவகித்திடு
நொடி மணியாக விரைகிறது
மணி பெருகி நாளாய் வழிகிறது
நாள் கடந்து கடந்து
மரணமாய் முடிகிறது
நிறங்களின் உடைவில்
சிறகுகள் துளிர்க்கின்றன
விரிவோடுகிறது வானம்
பெருங்களிப்பின் உற்சவ சீழ்க்கையொலி தெறிக்கிறது.
நீலப்பளிங்காய் மிளிர்கிறது
நீருக்குள் கிடக்கும்
வாளாய் ஒளிர்கிறது
முப்பாட்டனின் முகச்செழுமையாய் மரக்கா மலை
உடைந்த நீர்க்குமிழியாக
மறைந்து போனது பால்யம்
தானியங்கள் கொழித்த
இறந்த காலங்கள்
பேரன்பின் சுடருள் கருமை படர்கிறது
நிலங்கள் வழியாக
வாழ்க்கை நகர்ந்தது
தாவரங்களாகவே மனிதர்கள்
வேரற்று காற்றோடு அலைபடுதல் இக்கால நீங்கா சாபம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *