நியதி
துயரங்கள் அனைத்தும் காலச் சுவடாய்
விருப்பங்கள் அனைத்தும் கானல் நீராய்
கனவுகள் அனைத்தும் கலைந்திட்ட மேகமாய்
நினைவுகள் அனைத்தும் நெஞ்சினில் பாரமாய்
விடைபெற நினைத்தும் வழித்தடம் இருளாய்
தொடர்ந்திட நினைத்தும் முடிவற்ற தொலைவாய்
மறந்திட நினைத்தும் மாறாத உணர்வாய்
மருத்திட நினைத்தும் மலர்ந்திட்ட உறவாய்
உணர்வுகள் துளிர்த்தும் உருப்பெறா வடிவாய்
உண்மைகள் துளிர்த்தும் உணராத வடுவாய்
வார்த்தைகள் துளிர்த்தும் மௌனத்தின் பதிலாய்
வாய்ப்புகள் துளிர்த்தும் வாய்த்திடா நிலையாய்
புசித்திட பணித்தும் பசியாத வயிறாய்
புரிந்திட பணித்தும் பொருள்படா வரியாய்
துயிலுற பணித்தும் துவளாத விழியாய்
விழித்திட பணித்தும் விடியாத பொழுதாய் !!!!!
பிரியா ஜெயகாந்த்
சென்னை
மின்னஞ்சல்: priyajayakanth78@gmail.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.