Subscribe

Thamizhbooks ad

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – நிழலைத் திருடிய பூதம் – எஸ்.ஹரிணி சண்முகம்

 

 

குழந்தைகளின் மனம் முழுவதும் கற்பனைக்கு எட்டாத உலகம் ஒன்று இயங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த உலகத்தில் எப்போதும் துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கதை கேட்பதற்கு என்று தனித்துவமான நேரம் எப்படியோ கிடைத்துவிடுகிறது. அப்படிக் கிடைத்த நேரத்தை ஆக்கிரமிப்பதற்காவே இன்றைய கதை சொல்லிகளும், பெரியவர்களும், ஆசிரியர்களும் வரிசையில் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கதைகள் குழந்தைகளின் மனதிற்குள் செய்யும் மாயம் அளப்பரியது. கேட்கும் திறனை, பேசும் திறனை, வாசிக்கும் திறனை, எழுதும் திறனை, புதிய கோணத்தில் சிந்திக்கும் திறனை என்று ஏராளமான திறன்களை வளர்க்கின்றன.
மொத்தம் பதினொரு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்நூல், பலவேறு விதமான மாயா ஜாலங்களைக் கொண்டிருக்கிறது. அனைத்தும் கற்பனைதான் என்ற போதும், பிரமிக்க வைக்கும் கற்பனைக் கதையாக எழுதப்பட்டுள்ளது.

அனைத்து வகைக் குழந்தைகளும் வாசிப்பதற்கு ஏதுவான எளிமையான சொல்லாடல்கள், குழந்தைகள் மத்தியில் புழங்கும் அன்றாடப் பேச்சுநடை, நினைவுகூர்ந்து திரும்பச் சொல்லும் அளவிற்கான காட்சி அமைப்பு. பக்கத்து வீட்டு அண்ணா அக்காக்களின் பெயர்களைப் போன்ற கதாப்பாத்திரங்களின் பெயர்கள் என்று இந்நூலைப் பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

”மரம் பச்சை நிறக் குட்டிவானம்” என்ற கதை மிகவும் வித்தியாசமாக உள்ளது. நான்கூட சிறுவயதாக இருந்த போது மரம், செடி, கொடிகளுடன் பேசி இருக்கிறேன். அவைகளிடமிருந்து எந்தப் பதிலும் எனக்குக் கிடைத்ததில்லை. ஆனால், நான் சொல்வதைப் புரிந்து கொண்டதைப் போலத்தான் அவற்றின் இலைகள் தலையாட்டியிருக்கின்றன.

மனிதர்கள் பேசுவதைத் தாவரங்கள் புரிந்துகொள்கின்றன என்று எங்கோ கேள்விப்பட்டிருக்கின்றேன். அது உண்மையா? பொய்யா? என்பது இன்றளவும் எனக்குத் தெரியாது. இப்பொழுதும் குழந்தைகள் மரம் செடிகளிடம் பேசுவதைப் பார்க்கவே செய்கிறேன். இந்தக் கதையில் வருவதுபோலவே, என் கிராமத்தில் உள்ள பாட்டி மரத்தின் மேல் பேய் இருக்கும், பிசாசு இருக்கும் என்று பயமுறுத்துவார். இரவில் மரத்தின் பக்கவே திரும்பிப் பார்க்காத காலம் அது.

ஆனால், பகல் நேரத்தில் அதே மரத்தின் அடியில் தான் எல்லோருமாகச் சேர்ந்து விளையாடியிருக்கிறோம். இப்போதும் அதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.
இயற்கை என்பது மனிதர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அதில் மரங்களும் ஒரு அங்கம் என்பதை வித்தியாசமான முறையில் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க முயன்றிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் சரிதா ஜோ.

மரங்களின் இன்றியமையாத பங்கினை மிக அழகாக வர்ணித்து உள்ளதால் குழந்தைகளின் மனதில் மரங்கள் நீங்காத இடம் பிடிக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

மரங்கள் மனிதர்களுக்கு எண்ணற்ற பலன்களைத் தருகிறது. மனிதர்கள்தான் தங்களது சுயநலத்திற்காக வெட்டிச் சாய்க்கிறார்கள் ”நிழலைத் திருடிய பூதம்” என்ற இந்நூலை வாசிக்கும் குழந்தைகளுக்கு மிக அருமையான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

 

எஸ்.ஹரிணி சண்முகம்

 

 

நூலின் பெயர் : நிழலைத் திருடிய பூதம்
எழுத்தாளர் : கதைசொல்லி சி.சரிதா ஜோ
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள் : 64
விலை : ரூ.60/-

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும்...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர்...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது...

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – ஜன்மா – ப. ஆகாஷ்

      24 மணி நேரமும் பொழுதுபோக்கு அம்சங்களை வீட்டுக்குள் கொட்டிக் கொண்டே இருக்கும் தொலைக்காட்சி யுகத்தில்,திரைக்கு வரும் படங்கள் அதே வேகத்தில் கையடக்க கருவியில் கிடைக்கும் காலத்தில் நாடகங்களை பார்க்க எத்தனை பேர் வருவார்கள்?...

ஆயிரம் புத்தகம்,ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – மௌனம் உடையும் பொழுது [கவிதை நூல்] – மஞ்சுளா கோபி

        நடந்தே அழியணும் வழி கொடுத்தே தீரனும் கடன் செய்தே அழியணும் வேலை அழுதே அழியணும் துக்கம் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கூறுவதைப் போல நமது மனதின் பாரங்களை ....நெஞ்சை அழுத்தும்உணர்வுகளை... வாழ்வின் எதிர்பாரத நிகழ்வுகளை எழுதியே தீர்க்கணும் என்று வருகிற...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – இந்துத்துவம் கோட்பாடும் அரசியலும் – சந்திரன் தாமோதரன்

        ஒரு அரசியல் செயல்பாட்டாளானாக “இந்துத்துவம்” என்னை எதிர்மறையாக ஈர்க்கிறது. காரணம் அது நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் ஏதோ ஒருவகையில் செல்வாக்கு செலுத்துகிறது. மட்டுமில்லாமல் அது இப்போது அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அச்சுறுத்தவும் செய்கிறது. என்பதால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here